sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பிரதமருடன் பழனிசாமி சந்திப்பு

/

பிரதமருடன் பழனிசாமி சந்திப்பு

பிரதமருடன் பழனிசாமி சந்திப்பு

பிரதமருடன் பழனிசாமி சந்திப்பு


ADDED : ஜூலை 27, 2025 01:08 AM

Google News

ADDED : ஜூலை 27, 2025 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:திருச்சி விமான நிலையத்தில் நேற்றிரவு பிரதமர் மோடியை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி சந்தித்து பேசினார்.

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அரசு திட்டங்களை துவக்கி வைப்பதற்காக, இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடியை சந்திப்பதற்காக, தன் பிரசார பயணத்தை ஒத்தி வைத்து விட்டு, பழனிசாமி நேற்று திருச்சி வந்து, அங்குள்ள தனியார் விடுதியில் கட்சியின் முக்கிய பிரமுகர்களுடன் தங்கி இருந்தார்.

துாத்துக்குடியில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, நேற்று இரவு, 10:20 மணிக்கு திருச்சி வந்த பிரதமர் மோடியை, திருச்சி விமான நிலையத்தில், பழனிசாமி சந்தித்து பேசினார்.

அவருடன் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வ நாதன், காமராஜ் ஆகியோர் இருந்தனர்.

இரவு, 10:30 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த பிரதமர், கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள ஹோட்டலுக்கு காரில் புறப்பட்டுச் சென்றார். அவரை தொடர்ந்து வெளியே வந்த பழனிசாமி தரப்பினரும் புறப்பட்டு சென்றனர்.

பிரதமரிடம் நலம் விசாரித்த பழனிசாமி, தன் பிரசார பயணம் குறித்து விளக்கினார்.

அதை கேட்டறிந்த பிரதமர், தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.






      Dinamalar
      Follow us