sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பாம்பன் துாக்கு பாலத்தை திறந்து ஆய்வு

/

பாம்பன் துாக்கு பாலத்தை திறந்து ஆய்வு

பாம்பன் துாக்கு பாலத்தை திறந்து ஆய்வு

பாம்பன் துாக்கு பாலத்தை திறந்து ஆய்வு

1


ADDED : ஜன 21, 2025 04:51 AM

Google News

ADDED : ஜன 21, 2025 04:51 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: -தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக, ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பழைய ரயில் துாக்கு பாலத்தை பொறியாளர்கள் திறந்து மூடி ஆய்வு செய்தனர்.

1914ல் ஆங்கிலேயர் அமைத்த பாம்பன் ரயில் பாலம் நடுவில் உள்ள துாக்கு பாலம் பலவீனமானதால், புதிய ரயில் பாலம் கட்டப்பட்டது. 111 வயதான பழைய ரயில் பாலத்தின் துாக்கு பாலம் ராமேஸ்வரம் தீவின் அடையாள சின்னமாக உள்ளதால், இதனை பாதுகாத்து பராமரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. புதிய பாலம் கட்டுமானத்திற்காக 2024 ஏப்., முதல் பழைய துாக்கு பாலத்தை திறக்காமல் மூடி வைத்தனர்.

அன்று முதல் துாக்கு பாலத்தை பராமரிக்காமல் விட்டதால், உப்பு காற்றில் துருப்பிடித்து எலும்புக்கூடாய் காட்சியளித்தது. இதனால் பாலம் இடிந்து விழும் தருவாயில் உள்ளது என நேற்று முன்தினம் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.

இதையடுத்து மதுரை ரயில்வே கோட்டப் பொறியாளர் சந்தீப் பாஸ்கர், பொறியாளர்கள் நேற்று மதியம் துாக்கு பாலத்தை திறந்து மூடி ஆய்வு செய்தனர். இதில் துாக்கு பாலம் நன்றாக இருப்பதாகவும், துருப்பிடிக்காத வகையில் ரசாயனம் கலந்த அலுமினிய பெயிண்ட் பூசப்பட உள்ளது என்றும் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us