அ.தி.மு.க.,வை குழி தோண்டி புதைத்து விட்டனர் பன்னீர் வேதனை
அ.தி.மு.க.,வை குழி தோண்டி புதைத்து விட்டனர் பன்னீர் வேதனை
ADDED : மார் 17, 2026 02:10 AM

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நேற்று நடந்த தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது:
முன்னாள் முதல்வர் கருணாநிதி வழியில் முதல்வர் ஸ்டாலினும் அனைவரையும் ஒருங்கிணைத்து நடத்துகிறார். தி.மு.க., கூட்டணியில் இருந்து இதுவரை யாரும் வெளியே போகவில்லை.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொலைநோக்குடன் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை, பழனிசாமி முதல்வராக இருந்தபோது நிறுத்தி விட்டார்.
உலகத்தையே இயக்கிக் கொண்டிருக்கும் ஒன்பது கோள்களில் சக்தி வாய்ந்த கோள் சூரியன். அதனால்தான் அண்ணாதுரை அந்த காலத்திலேயே உதயசூரியன் சின்னத்தை தேர்ந்தெடுத்துள்ளார்.
அ.தி.மு.க.,வை குழி தோண்டி புதைத்தது, அக்கட்சியின் பழனிசாமியும், உதயகுமாரும் தான். என்னைப் பற்றி பேச அவர்களுக்கு அருகதை இல்லை.
இவ்வாறு பேசினார்.

