sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'வியூக வகுப்பாளர்கள் கட்சிகளுக்கு தேவை'

/

'வியூக வகுப்பாளர்கள் கட்சிகளுக்கு தேவை'

'வியூக வகுப்பாளர்கள் கட்சிகளுக்கு தேவை'

'வியூக வகுப்பாளர்கள் கட்சிகளுக்கு தேவை'


ADDED : பிப் 11, 2025 07:47 PM

Google News

ADDED : பிப் 11, 2025 07:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:இன்றைய டிஜிட்டல் உலகில், அரசியல் கட்சிகளுக்கு வியூக வகுப்பாளர்கள் தேவைப்படுவதாக, பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டி:

தெலுங்கானா, பீஹார் மாநில அரசுகளால், ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த முடியும்போது, தமிழக அரசாலும் முடியும். ஆனால், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த, முதல்வர் ஸ்டாலினுக்கு மனமில்லை.

பீஹாரில் நடத்தப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பை, நீதிமன்றம் நிராகரித்து விட்டதாக, முதல்வர் ஸ்டாலின் கூறுவது தவறு. இட ஒதுக்கீட்டின் அளவு உயர்த்தப்பட்டதற்குதான் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. தவறான தகவல்களை முதல்வருக்கு அதிகாரிகள் கொடுத்துள்ளனர்.

இன்றைய 'டிஜிட்டல்' யுகத்தில், தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க, அரசியல் கட்சிகளுக்கு வியூக வகுப்பாளர்கள் தேவைப்படுகின்றனர். கட்சியினருடன் உரையாடவும், சமூக வலைதளங்களில் செயல்படவும் நிபுணர்கள் தேவைப்படுகின்றனர். அதனால், பிரசாந்த் கிஷோர் போன்றவர்களை, கட்சிகள் பயன்படுத்துகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us