உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஆக 13, 2026 05:44 AM
அ நிறம் | அளவு
சென்னை: தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் எனப்படும் 'பெப்சி'யில் இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், 'ஸ்டண்ட்' கலைஞர்கள் உட்பட 23 சங்கங்கள் இணைந்துள்ளன.
இந்த அமைப்பின், 2026 - -29ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகள் பதவியேற்பு, நேற்று சென்னையில் நடந்தது.
'பெப்சி' தலைவராக ஆர்.கே.செல்வமணி ஐந்தாம் முறையாக பதவியேற்றார்.
பொதுச் செயலராக சுவாமிநாதன், பொருளாளராக செந்தில்குமார், துணைத் தலைவர்களாக அசோக் மேத்தா, மோகன மகேந்திரன் உள்ளிட்ட பலர் பதவியேற்றனர்.
