sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

துக்க வீடுகளில் படம் பிடிப்பதை தவிர்க்கலாம் : தமிழ் சினிமா நடப்பு தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள்

/

துக்க வீடுகளில் படம் பிடிப்பதை தவிர்க்கலாம் : தமிழ் சினிமா நடப்பு தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள்

துக்க வீடுகளில் படம் பிடிப்பதை தவிர்க்கலாம் : தமிழ் சினிமா நடப்பு தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள்

துக்க வீடுகளில் படம் பிடிப்பதை தவிர்க்கலாம் : தமிழ் சினிமா நடப்பு தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள்


ADDED : மார் 27, 2025 08:53 PM

Google News

ADDED : மார் 27, 2025 08:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: துக்க வீட்டில் அஞ்சலிக்காக, வைக்கப்பட்டிருக்கும் உடலை படம் பிடிப்பதை தவிர்க்கலாம் என்று ஊடகங்களுக்கு தமிழ் சினிமா நடப்பு தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழ் சினிமா நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை:

ஒருவரின் அழுகையோ, துயரத்தை வெளிப்படுத்தும் விதத்தை ஏன் இவ்வளவு வெட்ட வெளிச்சமாக்க வேண்டும்?

பார்வையாளர்களை கொண்டு வரும் என்ற எண்ணம் எத்தனை இரக்கமற்றது? கொடியது?

நாம் மற்றொருவரின் மரணத்தையோ, இயலாமையையோ கொண்டாடும் மனநிலைக்கு வந்துவிட்டோமோ என்ற கவலை வலக்கிறது.

இனிவரும் காலங்களில் ஊடக அனுமதி இறப்பு வீடுகளில் கூடவே கூடாது என்பதை முன்னெடுக்க வேண்டும்.

அனைத்து பத்திரிகையாளர் சங்கங்களும், பத்திரிகை தொடர்பாளர் யூனியனும் இணைந்து இதற்கு ஒரு நல்ல தீர்வை காண்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

சக மனிதர்களின் இழப்பை நம் வீட்டு இழப்பாகக் கருதி துயர் விசாரிக்க வரட்டும்; கையில் காமிரா இல்லாமல். இனிவரும் காலங்களில் இச்செயல் முற்றிலும் தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து ஊடகங்களுக்கு முன் சங்கம் இந்த வேண்டுகோளை வைக்கிறது.

இவ்வாறு தமிழ் சினிமா நடப்பு தயாரிப்பாளர் சங்க செயல் தலைவர் தியாகராஜன் அறிக்கையில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us