sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விருதுநகரில் பி.எம்.மித்ரா ஜவுளி பூங்கா; நிலம் ஒதுக்கீடு பெற விண்ணப்பிக்கலாம்

/

விருதுநகரில் பி.எம்.மித்ரா ஜவுளி பூங்கா; நிலம் ஒதுக்கீடு பெற விண்ணப்பிக்கலாம்

விருதுநகரில் பி.எம்.மித்ரா ஜவுளி பூங்கா; நிலம் ஒதுக்கீடு பெற விண்ணப்பிக்கலாம்

விருதுநகரில் பி.எம்.மித்ரா ஜவுளி பூங்கா; நிலம் ஒதுக்கீடு பெற விண்ணப்பிக்கலாம்


UPDATED : நவ 27, 2025 12:28 PM

ADDED : நவ 27, 2025 12:06 AM

Google News

UPDATED : நவ 27, 2025 12:28 PM ADDED : நவ 27, 2025 12:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: விருதுநகர் மாவட்டத்தில், ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவில் நிலம் ஒதுக்கீடு செய்ய விண்ணப்பிக்குமாறு தொழில்முனைவோருக்கு, 'சிப்காட்' அழைப்பு விடுத்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், இ.குமாரலிங்கபுரத்தில் பி.எம்.மித்ரா எனப்படும், பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மற்றும் ஆடைகள் உற்பத்தி தொழில் பூங்காவை, 1,052 ஏக்கரில், 'சிப்காட்' அமைக்கிறது. அங்கு, 1,894 கோடி ரூபாய் செலவில் உள்கட்டமைப்பு பணிகள், கழிவு சுத்திகரிப்பு நிலையம், தொழிலாளர் தங்கும் விடுதி, சுகாதார மையம், திறன் மேம்பாட்டு மையம் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன.

இந்த பூங்கா வாயிலாக, அதிக வேலைவாய்ப்பு உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, 600 ஏக்கர் நிலத்தை ஆலைகள் அமைப்பதற்காக, தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பணியில் சிப்காட் ஈடுபட்டுள்ளது.

இதற்காக, விண்ணப்பிக்குமாறு தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. நேற்று முதல் சிப்காட் இணையதளம் வாயிலாக விண்ணப்பம் துவங்கிஉள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள்; டிச., 17ம் தேதி.
ஒரு ஏக்கர் விலை; ரூ.55.32 லட்சம்.








      Dinamalar
      Follow us