sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அரசியல் ரீதியாக மத்திய அரசு பழிவாங்குகிறது: ஸ்டாலின்

/

அரசியல் ரீதியாக மத்திய அரசு பழிவாங்குகிறது: ஸ்டாலின்

அரசியல் ரீதியாக மத்திய அரசு பழிவாங்குகிறது: ஸ்டாலின்

அரசியல் ரீதியாக மத்திய அரசு பழிவாங்குகிறது: ஸ்டாலின்

3


ADDED : பிப் 10, 2025 06:21 AM

Google News

ADDED : பிப் 10, 2025 06:21 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை; 'தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 2,152 கோடி ரூபாயை பறித்து, வேறு மாநிலங்களுக்கு அளித்துள்ளனர்' என மத்திய அரசு மீது, முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டிஉள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழகத்திற்கு எதிரான, மத்திய பா.ஜ., அரசின் அட்டூழிய மனப்பான்மைக்கு அளவே இல்லாமல் போய் கொண்டிருக்கிறது. தேசிய கல்விக் கொள்கையையும், அதன்வழி மும்மொழி கொள்கையையும் திணிப்பதை நிராகரித்ததால், அப்பட்டமான அச்சுறுத்தல் நடவடிக்கையில் இறங்கிஉள்ளனர்.

தமிழக மாணவர்களுக்கு உரிய 2,152 கோடி ரூபாயை பறித்து வேறு மாநிலங்களுக்கு அளித்துள்ளனர். தங்கள் உரிமைகளுக்கு போராடும் மாணவர்களை தண்டிக்கும் நோக்கத்தில், இத்தகைய வலுக்கட்டாயமான செயலை செய்கின்றனர்.

இந்திய வரலாற்றில் வேறு எந்த அரசும், ஒரு மாநிலத்தை அரசியல் ரீதியாக பழிவாங்குவதற்காக, மாணவர்களின் கல்விக்கு தடை ஏற்படுத்தும் அளவிற்கு இரக்கமில்லாமல் நடந்து கொண்டது இல்லை.

தமிழக மக்கள் மீதான வெறுப்பு மற்றும் நமக்கு இழைக்கப்படும் அநீதியின் முழு உருவம் பா.ஜ., என்பது, மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us