ADDED : நவ 18, 2025 06:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: கோவை மாவட்டம், கோவை கொடிசியா அரங்கில், இயற்கை விவசாயிகள் மாநாடு நாளை நடக்கி றது.
மாநாட்டை துவக்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர மாநிலத்தில் இருந்து விமானம் வாயிலாக நாளை மதியம் கோவை வருகிறார். கோவை விமான நிலையத்தில் இருந்து காரில் கொடிசியா அரங்கு செல்கிறார். அங்கு, இயற்கை விவசாயத்தில் சிறப்பாக செயல்படும் விவசாயிகளுக்கு விருதுகளை வழங்க உள்ளார்.
விழா முடிந்ததும், மோடி பிற்பகலில் டில்லி செல்கிறார்.

