sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சீமான் மீது வழக்கு பதியாவிட்டால் போராட்டம்: கிருஷ்ணசாமி மிரட்டல்

/

சீமான் மீது வழக்கு பதியாவிட்டால் போராட்டம்: கிருஷ்ணசாமி மிரட்டல்

சீமான் மீது வழக்கு பதியாவிட்டால் போராட்டம்: கிருஷ்ணசாமி மிரட்டல்

சீமான் மீது வழக்கு பதியாவிட்டால் போராட்டம்: கிருஷ்ணசாமி மிரட்டல்

5


ADDED : ஜூன் 20, 2025 06:46 AM

Google News

ADDED : ஜூன் 20, 2025 06:46 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி சென்னையில் அளித்த பேட்டி:

கடந்த 15ம் தேதி, துாத்துக்குடி மாவட்டம், பெரியதாழையில், கள் இறக்கிய சீமான் மற்றும் அதில் பங்கேற்றவர்கள் மீது போலீசார் உடனே வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

சீமானை கைது செய்ய வேண்டும். இல்லையெனில், இது சமூகத்தில் போக்கிரித்தனத்தையும், பொல்லாத விஷயங்களையும் ஊக்கப்படுத்துவதாக அமைந்து விடும்.

தமிழ்த்தேசியம் பேசிவிட்டு, கள் தேசியத்தையும், சாராய தேசியத்தையும் உருவாக்க சீமான் முயல்கிறார்.

இனி தமிழகத்தில் எந்த இடத்திலாவது சீமான் கள் இறக்கினால், கள் பானைகளை உடைக்க, 100 அரிவாளோடு சிலர் தயாராக இருக்கின்றனர்.

கள் இறக்குவோருக்கு பாதுகாப்பு கொடுக்க, அரிவாளை ஊருக்குள் துாக்கினால், கள் பானைகளை உடைக்க, 100 அரிவாளை ஊருக்குள் துாக்கினால் நிலை என்னவாகும்.

சீமான் தன்னை திருத்திக்கொள்ள வேண்டும் அல்லது திருத்தப்படுவார். கள் இறக்கிய சீமான் மற்றும் அவருடன் பங்கேற்றவர்கள் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்; இல்லையென்றால், நாங்கள் அடுத்தகட்டம் நோக்கி செல்வோம். போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும். சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us