sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சபரிமலை சீசனை முன்னிட்டு புனலுார் சிறப்பு ரயில் தேவை; ஐயப்ப பக்தர்கள் கோரிக்கை

/

சபரிமலை சீசனை முன்னிட்டு புனலுார் சிறப்பு ரயில் தேவை; ஐயப்ப பக்தர்கள் கோரிக்கை

சபரிமலை சீசனை முன்னிட்டு புனலுார் சிறப்பு ரயில் தேவை; ஐயப்ப பக்தர்கள் கோரிக்கை

சபரிமலை சீசனை முன்னிட்டு புனலுார் சிறப்பு ரயில் தேவை; ஐயப்ப பக்தர்கள் கோரிக்கை


ADDED : நவ 13, 2024 10:49 PM

Google News

ADDED : நவ 13, 2024 10:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார் ; சபரிமலை ஐயப்பன் கோயில் கார்த்திகை மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைகளை முன்னிட்டு மதுரையில் இருந்து புனலுார் சென்று திரும்பும் வகையில் தினமும் சிறப்பு ரயில் இயக்க வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தின் பல்வேறுமாவட்டங்களில் இருந்து ஐயப்பன் கோயில் செல்லும் பக்தர்கள் மதுரை மீனாட்சி அம்மன், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், குற்றாலம், அச்சன் கோவில், ஆரியங்காவு, குளத்துபுழா ஐயப்பன் கோயில்களில் தரிசனம் செய்து விட்டு சபரிமலை சென்று திரும்புவது வழக்கம்.

இதில் மதுரை, ஸ்ரீவில்லிபுத்துார் வழியாக செல்லும்போது தான், ஐயப்பன் படைவீடு கோயில்களுக்கு செல்ல முடியும் என்பதால், மற்ற வழிகளை விட இந்த வழித்தடத்தில் மிகவும் அதிகமாக பக்தர்கள் வருகின்றனர்.

இவ்வாறு வரும் ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக மதுரையில் இருந்து விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், தென்காசி ஆரியங்காவு, தென்மலை வழியாக புனலுார் வரை சென்று திரும்பும் வகையில், மதுரையில் இருந்து தினமும் காலை, மாலை 6:00 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துஉள்ளனர்.






      Dinamalar
      Follow us