ADDED : மார் 08, 2024 12:15 PM
சென்னை:பெண் போலீஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், சிறப்பு டி.ஜி.பி.,யாக பதவி வகித்த ராஜேஷ் தாசுக்கு, மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து, விழுப்புரம் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து, மேல்முறையீடு செய்யப்பட்டது. தண்டனையை உறுதி செய்து, விழுப்புரம்முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, தண்டனையை நிறுத்தி வைக்கவும், சரண் அடைவதில் இருந்து விலக்கு அளிக்கவும் கோரி, உயர் நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மனுத்தாக்கல் செய்தார்.
இம்மனு, நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது. ராஜேஷ் தாஸ் சார்பில், மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, சரணடைவதில் விலக்கு அளிக்க கோரினார். போலீஸ் தரப்பில், கூடுதல்குற்றவியல் வழக்கறிஞர்ராஜ்குமார் ஆஜராகி அவகாசம் கோரினார்.
உடன், போலீஸ் தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை, வரும் 12ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

