sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

3,800 ஓய்வூதியர்களுக்கு ஓய்வுகால பலன் விடுவிப்பு

/

3,800 ஓய்வூதியர்களுக்கு ஓய்வுகால பலன் விடுவிப்பு

3,800 ஓய்வூதியர்களுக்கு ஓய்வுகால பலன் விடுவிப்பு

3,800 ஓய்வூதியர்களுக்கு ஓய்வுகால பலன் விடுவிப்பு


ADDED : ஆக 26, 2025 07:10 AM

Google News

ADDED : ஆக 26, 2025 07:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில், 2023- ஜூலை முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு, ஓய்வூதிய பணப்பலன் வழங்கப்படவில்லை. அதை வழங்கக் கோரி, பல்வேறு தொழிற் சங்கங்கள் தொடர் போராட்டங்களை நடத்தின.

இதன் பயனாக, போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி, 2023- ஜூலை முதல், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை ஓய்வு பெற்றவர்களுக்கு, பணப்பலன் வழங்க, ஒரு வாரத்துக்கு முன் அரசாணை வெளியிடப்பட்டது.

எட்டு அரசு போக்குவரத்து கழகங்களிலும், 3,800 ஓய்வூதியர்களின் வங்கி கணக்கில், 1,138 கோடி ரூபாய் நேற்று வரவு வைக்கப்பட்டது.

அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத் தலைவர் கதிரேசன் கூறியதாவது:

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக ஓய்வு பெற்றவர்களுக்கு, தற்போதுதான் பணப்பலன் வழங்கப்பட்டுள்ளது. ஓய்வு பெறும் நாளில், ஒரு தட்டும், பொன்னாடையும் மட்டும் கொடுத்து அனுப்பி விடுகின்றனர்.

இந்த நடைமுறையை மாற்றி, அரசு ஊழியர்களை போலவே, ஓய்வு பெறும் நாளில் பணப்பலன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us