sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அரசு பள்ளி மாணவர்களின் உயர்கல்விக்கு ரூ.6.23 கோடி

/

அரசு பள்ளி மாணவர்களின் உயர்கல்விக்கு ரூ.6.23 கோடி

அரசு பள்ளி மாணவர்களின் உயர்கல்விக்கு ரூ.6.23 கோடி

அரசு பள்ளி மாணவர்களின் உயர்கல்விக்கு ரூ.6.23 கோடி


ADDED : டிச 24, 2024 07:03 AM

Google News

ADDED : டிச 24, 2024 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அரசு பள்ளிகளில் படித்து, உயர் கல்வி நிறுவனங்களில் சேரும், மாணவர்களின் கல்வி செலவை ஏற்க, அரசு 6 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.

உதவித்தொகை


'அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து, நம் நாட்டில் உள்ள தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அனைத்து மாணவர்களின் கல்வி செலவை, அரசே ஏற்கும்.

'வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி உதவித்தொகை பெற்று, அக்கல்வி நிறுவனங்களில் சேர செல்லும், முதல் பயண தொகையை அரசே ஏற்கும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும், 6 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்' என, கடந்த ஜூன் மாதம் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, அரசு பள்ளிகளில் படித்த, 2021 - 22ம் கல்வியாண்டில் 18; 2023 - -24ம் கல்வியாண்டில் 74; நடப்பு கல்வியாண்டில் 333 மாணவர்கள், பல்வேறு தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் சேர்ந்துஉள்ளனர்.

ஒப்புதல்


அவர்களுக்கான கல்வி உதவித்தொகையாக, 6 கோடியே 23 லட்சத்து 8,168 ரூபாய் ஒதுக்க வேண்டும் என, மாதிரி பள்ளிக்கல்வி துறை உறுப்பினர் செயலர், அரசுக்கு கடிதம் எழுதினார். அதற்கு நிதித்துறை ஒப்புதல் அளித்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us