sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கூடுதல் சிறப்பம்சம்

/

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கூடுதல் சிறப்பம்சம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கூடுதல் சிறப்பம்சம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கூடுதல் சிறப்பம்சம்


UPDATED : அக் 10, 2011 02:31 AM

ADDED : அக் 08, 2011 11:50 PM

Google News

UPDATED : அக் 10, 2011 02:31 AM ADDED : அக் 08, 2011 11:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''இந்தியா கேட்டுக் கொண்டதற்கிணங்க கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தானியங்கி குளிரூட்டி அமைப்பு கொண்ட ஈணுலைகள் உள்ளதால் பொதுமக்கள் அணுமின் நிலையம் குறித்து எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை,'' என, இந்திய அணுசக்தி விஞ்ஞானி டாக்டர் எம்.ஆர்.சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.

கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து அவர், வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை:ஜப்பானில் உள்ள புகுஷிமா அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து, உலகம் முழுவதும் உள்ள அணுமின் உற்பத்தியுடன் சம்பந்தப்பட்ட அமைப்புகளை விழிப்படையச் செய்துள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து அணுமின் நிலையங்களின் நிலை குறித்து, உடனடியாக ஆய்வு மேற்கொள்ள, பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவிட்டார். இதையடுத்து, இந்திய அணுமின் கழகம், அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் சார்பில், அணு உலைகளின் பாதுகாப்பு அம்சங்கள், நிலநடுக்கம், சுனாமி, வெள்ளம் மற்றும் பிற காரணங்களால், எதிர்பாராத விதமாக ஏற்படக் கூடிய பாதிப்புகள், அச்சுறுத்தல்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன.இக்குழுக்கள் நடத்திய ஆய்வில், இந்திய அணு உலைகள் முறையான வடிவமைப்பு கொண்டுள்ளதாலும், ஜப்பானை போல கடுமையான நில நடுக்கம் இந்தியாவில் எப்போதும் ஏற்படாது என்பதாலும், ஜப்பான் அணுமின் நிலையத்தில் ஏற்பட்டது போல ஒரு பாதிப்பு இங்கு ஏற்படாது என்று தெரிய வந்துள்ளது.



கடந்த மார்ச் மாதம் ஜப்பானில் ஏற்பட்ட நில நடுக்கம், சமீபத்தில் சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்டதைப் போல, ஆயிரம் மடங்கு வலிமை கொண்டது. இந்நிலையில், சிக்கில் ஏற்பட்ட நிலநடுக்கமே இந்தியாவை உலுக்கிய கடுமையான நிலநடுக்கம் என்று கண்டறியப்பட்டுள்ளது. அணுமின் நிலையத்தில் நடத்திய ஆய்வுகளின் பயனாக, கூடுதல் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கூடங்குளம் அணுமின் நிலையத்தில், அணு உலைகள் மூடப்படும் போது, அணு எரிபொருளை குளிர்விப்பதற்காக, தலா ஒரு டீசல் ஜெனரேட்டர் கொண்ட நான்கு தனித் தனித் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. குளிர்விப்பதற்கான டீசல் ஜெனரேட்டர், அதில் உள்ள இணைப்பு அமைப்புகள், கட்டுப்பாட்டு கருவிகள் போன்றவை, கூடங்குளம் பகுதியில் ஏற்படும் சுனாமியோ, வெள்ளப்பெருக்கோ ஆகியவை எந்த உயரத்திற்கு எழுமோ, அதைவிட அதிக உயரத்தில் பொருத்தப்பட உள்ளன. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், ஒட்டு மொத்த அணு உலை அமைப்பும் தானியங்கி முறையில் குளிர்விக்கப்படும் என்பது தான்.இவ்வாறு சீனிவாசன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.



டாக்டர் எம்.ஆர்.சீனிவாசன், நாட்டின் மிகச் சிறந்த அணுசக்தி விஞ்ஞானி. தற்போது, அணுசக்தி கழகத்தின் உறுப்பினராக உள்ளார். இந்திய அணுசக்தி ஆணையத்தின் தலைவராகவும், திட்ட கமிஷன் உறுப்பினராகவும், அணுசக்தி துறை செயலராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். கல்பாக்கம், கூடங்குளம் ஆகிய அணுமின் நிலையங்களை அமைத்ததில் இவரின் பங்கு அதிகம்.



மீனவர்களுக்கு பாதிப்பிருக்காது!

நாட்டில் தற்போது கல்பாக்கம், தாராப்பூர் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்த அணு உலைகள் அமைந்துள்ள பகுதிகளில் மீன்பிடி தொழிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே, கூடங்குளம் பகுதிகளிலும் அணுமின் உலை செயல்பாட்டில் மீன்பிடித் தொழில் உறுதியாக பாதிக்காது. மாறாக, கூடங்குளம் அணுமின் நிலையத்தால் அப்பகுதி வளர்ச்சியடைவதால் மீன் தேவை அதிகரிக்கும். கல்பாக்கம், தாராப்பூர் அணுமின் நிலையங்களால் அவை அமைந்துள்ள பகுதிகள் நல்ல வளர்ச்சியடைந்து, மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட்டால், அப்பகுதி கிராமங்கள் நல்ல வளர்ச்சியை பெறும். மருத்துவ வசதிகள் கூடும். சுகாதாரம் மேம்படும்.



- எஸ்.உமாபதி -








      Dinamalar
      Follow us