sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விலையில்லா பொருட்களை வாங்க பள்ளி ஆசிரியர்கள் அலைக்கழிப்பு

/

விலையில்லா பொருட்களை வாங்க பள்ளி ஆசிரியர்கள் அலைக்கழிப்பு

விலையில்லா பொருட்களை வாங்க பள்ளி ஆசிரியர்கள் அலைக்கழிப்பு

விலையில்லா பொருட்களை வாங்க பள்ளி ஆசிரியர்கள் அலைக்கழிப்பு


ADDED : ஜன 06, 2025 03:22 AM

Google News

ADDED : ஜன 06, 2025 03:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழக அரசால் வழங்கப்படும் மாணவர்களுக்கான விலையில்லா பொருட்களை வாங்க அலைக்கழிப்பு செய்வதாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.

பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களுக்கு விலையில்லா பொருட்களாக பாடப்புத்தகங்கள், காலணி, சீருடை, புத்தகப்பை, புவியியல் வரைபடம், வண்ண பென்சில்கள், கணித உபகரணப்பெட்டி உள்ளிட்டவை ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது.

இவை ஒவ்வொன்றையும் வெவ்வேறு கால கட்டங்களில் பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளுக்கு வழங்குகிறது. பொருட்களை மொத்தமாக வரவழைத்து இருப்பு வைக்கப்பட்ட பள்ளிகளுக்கு மற்ற பள்ளி ஆசிரியர்களை அதிகாரிகள் அழைத்து வாங்கி செல்ல கூறுகின்றனர்.

மேலும் இப்பொருட்களை எடுத்து செல்வதற்கான செலவு தொகையையும் வழங்குவதில்லை. இதனால் ஆசிரியர்கள் தங்கள் கையில் இருந்து செலவிடும் நிலை உள்ளது. பள்ளி துவங்கும் போது அனைத்து விலையில்லா பொருட்களையும் வழங்கிட பள்ளிக்கல்வித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us