sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பாலியல் வன்முறை வழக்கு ஞானசேகரனுக்கு 'குண்டாஸ்'

/

பாலியல் வன்முறை வழக்கு ஞானசேகரனுக்கு 'குண்டாஸ்'

பாலியல் வன்முறை வழக்கு ஞானசேகரனுக்கு 'குண்டாஸ்'

பாலியல் வன்முறை வழக்கு ஞானசேகரனுக்கு 'குண்டாஸ்'


ADDED : ஜன 05, 2025 11:35 PM

Google News

ADDED : ஜன 05, 2025 11:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை அண்ணா பல்கலை மாணவி, பாலியல் வன்முறை வழக்கில் கைதான ஞானசேகரன், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

டிசம்பர், 23ம் தேதி இரவு, 7:45 மணியளவில், சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில், 19 வயது மாணவி, பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட வழக்கில், சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன், 37 கைது செய்யப்பட்டார்.

அவருக்கு கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதால், ஸ்டான்லி அரசு மருத்துவனையில், கைதிகளுக்கான வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே, அண்ணா பல்கலை மாணவி, பாலியல் வன்முறை சம்பவத்தில், வேறு நபருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து, மூன்று பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அடங்கிய, சிறப்பு குழு விசாரித்து வருகிறது.

இக்குழு அதிகாரிகள் நேற்று முன்தினம், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஞானசேகரன் வீட்டில் சோதனை நடத்தி, சொத்து ஆவணங்கள், கத்தி மற்றும் மடிக்கணினி, கம்ப்யூட்டருக்கான ஹார்ட் டிஸ்க், மூன்று மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். அவற்றை சைபர் குற்ற ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளனர்.

தங்களுக்கு கிடைத்த ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் அடிப்படையில், ஞானசேகரனிடமும் நேற்று விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், சிறப்பு புலனாய்வு குழு பரிந்துரையின்படி, ஞானசேகரன் நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை, கமிஷனர் அருண் பிறப்பித்துள்ளார்.






      Dinamalar
      Follow us