அ.தி.மு.க., பிரமுகர் கொலை வழக்கில் ஆறு பேர் கைது
அ.தி.மு.க., பிரமுகர் கொலை வழக்கில் ஆறு பேர் கைது
ADDED : மார் 01, 2026 06:24 AM

வடமதுரை: திண்டுக்கல் பெரியகோட்டையை சேர்ந்த செங்கல் சூளை உரிமையாளர் முத்தன் (எ) மருதமுத்து 42. திருமணம் ஆகவில்லை. இவர் அ.தி.மு.க., திண்டுக்கல் மேற்கு ஒன்றிய அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணைத்தலைவராக இருந்தார்.
பிப்.,26 இரவு பெரியகோட்டை - வன்னியபட்டி ரோட்டில் நடந்து சென்ற போது டூவீலர்களில் வந்த மர்ம கும்பல் இவரை வெட்டிக்கொலை செய்தது. வேடசந்துார் டி.எஸ்.பி., பவித்ரா, வடமதுரை இன்ஸ்பெக்டர் நிதிக்குமார் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் மருதமுத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக சீலப்பாடி குளிப்பட்டி வினோத்குமார் 29, காப்பிளியபட்டி பகவதி 29, பெரியகோட்டை முத்துக்குமார் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

