சூரியசக்தி மின் உற்பத்தி திறன் 10,000 மெகா வாட்டை தாண்டியது
சூரியசக்தி மின் உற்பத்தி திறன் 10,000 மெகா வாட்டை தாண்டியது
ADDED : ஏப் 15, 2025 01:20 AM

சென்னை: தமிழகத்தில், அனைத்து வகை சூரியசக்தி மின் நிலையங்களின் உற்பத்தி திறன், 10,000 மெகாவாட்டை தாண்டியுள்ளது.
சூரியசக்தி மின் உற்பத்திக்கு, சூரியனின் வெப்பத்தை விட ஒளியே முக்கியம். தமிழகத்தில் ஆண்டுக்கு, 300 நாட்களுக்கு மேல் சூரியசக்தி மின்சாரம் கிடைக்கும் சூழல் உள்ளது.
பிப்ரவரி, மார்ச் மாதங்களில், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட தென்மாவட்டங்களில், அதிகாலை 5:30 முதல் இரவு 7:00 மணி வரையும்; மற்ற மாதங்களில் மழை பெய்யும் நாட்கள் தவிர்த்து, காலை, 6:30 முதல் மாலை, 6:00 மணி வரையும் சூரிய ஒளி கிடைக்கிறது.
இதனால், பலரும் வீடுகளில் குறைந்த திறனில் மேற்கூரை மின் நிலையங்களை அமைத்து வருகின்றனர். கடந்த மாத நிலவரப்படி, தமிழகத்தில் ஒட்டுமொத்த சூரியசக்தி மின் உற்பத்தி திறன், 10,153 மெகாவாட்டாக அதிகரித்து உள்ளது.
அதில் வீடுகளில், 932 மெகாவாட் திறனில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், விவசாய திட்டங்களின் கீழ், 70 மெகா வாட் திறனில், மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
சூரியசக்தி மின் நிலையங்களில், மழை தவிர்த்த மற்ற நாட்களில் தினமும் சராசரியாக, 5,000 மெகா வாட் மின்சாரம் கிடைக்கிறது.