sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விவாகரத்து வழக்கில் தம்பதியை நேரில் ஆஜராக வற்புறுத்த கூடாது: ஐகோர்ட்

/

விவாகரத்து வழக்கில் தம்பதியை நேரில் ஆஜராக வற்புறுத்த கூடாது: ஐகோர்ட்

விவாகரத்து வழக்கில் தம்பதியை நேரில் ஆஜராக வற்புறுத்த கூடாது: ஐகோர்ட்

விவாகரத்து வழக்கில் தம்பதியை நேரில் ஆஜராக வற்புறுத்த கூடாது: ஐகோர்ட்


ADDED : அக் 24, 2024 01:47 AM

Google News

ADDED : அக் 24, 2024 01:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'விவாகரத்து கேட்டு வழக்கு தாக்கல் செய்யும் போதும், அடுத்த கட்ட விசாரணைகளின் போதும், கணவன் - மனைவி ஆஜராகும்படி, குடும்ப நீதிமன்றங்கள் வற்புறுத்தக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த தம்பதியர், திருமணத்துக்கு பின் அமெரிக்கா சென்றனர். இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. பிரச்னை தீராததால், சுமுகமாக பிரிந்து விட நினைத்தனர். அமெரிக்காவில் இருந்து, சென்னை வந்தார் மனைவி. விசா பிரச்னையால் கணவரால் வர முடியவில்லை. தந்தையை 'பவர் ஏஜன்ட்' ஆக நியமித்து, பரஸ்பர விவாகரத்து கேட்டு, சென்னை குடும்ப நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

துாதரகம்


காணொளி வாயிலாக ஆஜராக, கணவர் அனுமதி கோரினார். அதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, வேலை காரணமாக, மனைவியும் அமெரிக்கா செல்ல நேரிட்டது. தன் தாயை, பவர் ஏஜன்ட் ஆக மனைவி நியமித்தார். கணவன் - மனைவி இருவரும் காணொளி வாயிலாக ஆஜராகினர். துாதரகம் வாயிலாக காணொளியில் ஆஜராகாததால், அவர்களின் சாட்சியங்களை பதிவு செய்ய, குடும்ப நீதிமன்றம் அனுமதிக்கவில்லை.

விசாரணை


இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மனைவி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல் மற்றொரு தம்பதியினரும், துாதரகம் செல்லாமல், அமெரிக்காவில் உள்ள தங்கள் வீட்டில் இருந்து, காணொளி வாயிலாக ஆஜராக அனுமதிக்க கோரி, மனு தாக்கல் செய்தனர்.

இம்மனுக்களை விசாரித்த, நீதிபதி எம்.நிர்மல்குமார் பிறப்பித்த உத்தரவு:

உலகத்தின் எந்த பகுதியில் இருப்பவர்களும், காணொளி வாயிலாக விசாரணை நடவடிக்கைகளில் பங்கேற்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. அதனால், வழக்கு விசாரணையின் முதல் கட்டத்தில் இருந்து முடியும் வரை, சம்பந்தப்பட்டவர்கள் ஆஜராக வேண்டும் என்பதை வற்புறுத்தாமல், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக விசாரணை நடப்பதை, குடும்ப நல நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்.

தொழில்நுட்ப ஆட்சேபனைகளை எழுப்பாமல், எந்த கட்டத்திலும் சம்பந்தப்பட்டவர்கள் நேரில் ஆஜராகும்படி, குடும்ப நல நீதிமன்றம் வற்புறுத்தக் கூடாது. பரஸ்பர விவாகரத்து கேட்டு, ஹிந்து திருமண சட்டப்படி வழக்கு தாக்கல் செய்யும்போது, கணவன் - மனைவி ஒன்று சேர்வதற்கு வாய்ப்பில்லை; நிர்ப்பந்தத்தால் பரஸ்பர ஒப்புதல் பெறவில்லை என்பதை, நீதிமன்றம் தான் பார்க்க வேண்டும்.

இதை, மனுவை சரிபார்ப்பதன் வாயிலாக, காணொளி வாயிலாக ஆஜரானவர்களிடம் விசாரித்து தெரிந்து கொள்ள முடியும். எனவே, தொழில்நுட்ப ஆட்சேபனைகளை, குடும்ப நல நீதிமன்றங்கள் எழுப்புவது முறையற்றது; அதை ஏற்க முடியாது. பயண கட்டுப்பாடுகள் போன்ற பல்வேறு காரணங்களால், வழக்கு தொடுத்தவர்களால் நேரில் ஆஜராவதில் சிக்கல்கள் உள்ளன.

உத்தரவு


இதனால், பரஸ்பர விவாகரத்து கோரும் வழக்குகள் பெரும்பாலும் நிலுவையில் உள்ளன. இந்தப் பிரச்னைகளில் இருந்து விடுபட, சில வழிமுறைகள் பிறப்பிக்கப்படுகின்றன.

l விவாகரத்து கோரி வழக்கு தாக்கல் செய்யும் போதும், அடுத்த கட்ட விசாரணைகளின் போதும், கணவன் - மனைவி நேரில் ஆஜராகும்படி, குடும்ப நல நீதிமன்றங்கள் வற்புறுத்தக்கூடாது

l நேரடியாகவோ அல்லது பவர் ஆப் அட்டர்னி வாயிலாகவோ, வழக்கு தாக்கல் செய்யலாம். பவர் ஆப் அட்டர்னி, பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்

l வழக்கு தொடுத்தவர்கள் சார்பில், 'பவர் ஆப் அட்டர்னி' ஆஜராகலாம். அத்தகைய பவர் ஆப் அட்டர்னி, வழக்கறிஞராக மட்டும் இருக்கக் கூடாது

l உரிய ஆவணங்களுடன், வழக்கை, பவர் ஆப் அட்டர்னி அளிக்கலாம். தாங்கள் இருக்கும் இடங்களில் இருந்து, காணொளி வாயிலாக, கணவன் - மனைவி ஆஜராகலாம். இருக்கும் இடம், அவர்களின் அடையாளத்தை, உரிய ஆவணங்கள் வாயிலாக உறுதிப்படுத்த வேண்டும்

l காணொளி வாயிலாக ஆஜராபவர்களிடம், ஆவணங்கள், மனு, பிரமாண பத்திரத்தை நீதிமன்றம் சரிபார்த்துக் கொள்ளலாம். சாட்சியங்களையும் பதிவு செய்து, உரிய உத்தரவுகளை பிறப்பிக்கலாம்.

இந்த இரண்டு வழக்குகளை பொறுத்தவரை, தம்பதியினரின் திருமணம் ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us