மருத்துவருக்கு கத்திக்குத்து; முதல்வர் ஸ்டாலின் அதிர்ச்சி!
மருத்துவருக்கு கத்திக்குத்து; முதல்வர் ஸ்டாலின் அதிர்ச்சி!
ADDED : நவ 13, 2024 12:30 PM

சென்னை: 'டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும்' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் பாலாஜியை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். பாலாஜிக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன்.
அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு நேரம், காலம் பார்க்காமல் உரிய சிகிச்சை அளிப்பதில் நமது அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற பணி அளப்பரியது. இப்பணியின்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

