ADDED : செப் 30, 2025 08:03 AM

ராமநாதபுரம் : முதல்வர் ஸ்டாலின் , வரும் அக்.,3ல் ராம நாதபுரம் செல்கிறார்.
ராமநாதபுரத்தில் நேற்று முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் ரோடு ஷோ நிகழ்ச்சிக்கும், இன்று, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கரூரில், த.வெ.க., தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து, இந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், ராமநாதபுரம் அருகே பேராவூரில், வரும் அக்.,3ல், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பங்கேற்பதற்காக, அக்.2ம் தேதி இரவு, ராமநாதபுரத்துக்கு முதல்வர் ஸ்டாலின் செல்கிறார்.
கரூர் சம்பவம் காரணமாக, ராமநாதபுரத்தில் ஸ்டாலின் திட்டமிட்டு இருந்த ரோடு ஷோ நிகழ்ச்சி ரத்து செய்யப்பட் டுள்ளது.
அதற்கு பதிலாக, அவர் தங்கும், அரசு விருந்தினர் மாளிகையில், மீனவர், வர்த்தகர், விவசாய சங்க பிரதிநிதிகளுடன் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.