sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'மாநில கல்விக்கொள்கையால் உயர்கல்வி தரம் பாதிக்கப்படும்' 

/

'மாநில கல்விக்கொள்கையால் உயர்கல்வி தரம் பாதிக்கப்படும்' 

'மாநில கல்விக்கொள்கையால் உயர்கல்வி தரம் பாதிக்கப்படும்' 

'மாநில கல்விக்கொள்கையால் உயர்கல்வி தரம் பாதிக்கப்படும்' 

6


ADDED : ஆக 09, 2025 01:30 AM

Google News

6

ADDED : ஆக 09, 2025 01:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: தமிழக அரசின் மாநில கல்வி கொள்கை குறித்து, முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி வெளியிட்ட அறிக்கை:

ஜே.இ.இ.,நீட் போன்ற தேசிய போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள, தமிழக மாணவர்களை தயார்படுத்தும் நோக்கத்துடன், பிளஸ் 1 பொதுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது.

தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே, போட்டி தேர்வுகளில் தமிழக மாணவர்களின் செயல்திறன் கணிசமாக மேம்பட்டது.

இந்நிலையில், தேர்வு ரத்து செய்யப்பட்டால், பெரும்பாலான பள்ளிகள் நேரடியாக பிளஸ் 2 வகுப்பு பாடங்களை கற்பிக்க தொடங்கிவிடும். இதற்கு காரணம், பொறியியல் மற்றும் பிற பட்டப்படிப்பு சேர்க்கைகள், பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே நடைபெறுகின்றன.

பிளஸ் 1 பொதுத் தேர்வை நீக்குவது நீட், ஜே.இ.இ. போன்ற தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களின் வாய்ப்புகளை பாதிப்பது மட்டுமல்லாமல், ஏற்கனவே மோசமான நிலையில் உள்ள தமிழக உயர்கல்வி தரத்தையும், கடுமையாக பாதிக்கும். இவ்வாறு, பாலகுருசாமி கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us