sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சாம்சங் நிறுவனத்தில் ஸ்டிரைக்; தொழிற்சங்கம் மீது வழக்கு!

/

சாம்சங் நிறுவனத்தில் ஸ்டிரைக்; தொழிற்சங்கம் மீது வழக்கு!

சாம்சங் நிறுவனத்தில் ஸ்டிரைக்; தொழிற்சங்கம் மீது வழக்கு!

சாம்சங் நிறுவனத்தில் ஸ்டிரைக்; தொழிற்சங்கம் மீது வழக்கு!

7


ADDED : செப் 20, 2024 04:28 PM

Google News

ADDED : செப் 20, 2024 04:28 PM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : சாம்சங் நிறுவனத்தில், 11 நாட்களாக, தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டம் நடந்து வந்த நிலையில், சி.ஐ.டி.யு., சங்கம் மீது அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

மொபைல் போன் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் சாம்சங் நிறுவனம், தன் உற்பத்தி வளாகத்தை சென்னை அருகே கொண்டுள்ளது.

இதில் பணியாற்றும் தொழிலாளர்கள் கடந்த 11 நாட்களாக கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் சாம்சங் நிறுவனம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'தொழிற்சங்க நடவடிக்கைகள் முலம் தொழிற்சாலையின் செயல்பாடுகளை சீர்குலைக்கின்றனர். மற்ற ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுக்கின்றனர். இவ்வாறு செய்வது தொழிற்சாலையின் சுமூகமான செயல்பாடு மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும்,' என்று சாம்சங் தெரிவித்துள்ளது. இது குறித்து சிஐடியு சங்கத்தினர் கூறுகையில், தொழிலாளர்கள் சட்டப்பூர்வமாக வேலைநிறுத்தம் செய்கிறார்கள், சாம்சங்கின் புகார்களை நாங்கள் நீதிமன்றத்தில் சந்திப்போம் என்றனர்.

இதனிடையே, எல்லாப் பிரச்சினைகளையும் விரைவில் தீர்க்க, ஆலையில் உள்ள தொழிலாளர்களுடன் பேச்சு தொடங்கி உள்ளதாகவும், சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us