sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பள்ளியில் மின்சாரம் தாக்கி பலியான மாணவன்; குடும்பத்துக்கு அரசு ரூ.5 லட்சம் நிவாரணம்

/

பள்ளியில் மின்சாரம் தாக்கி பலியான மாணவன்; குடும்பத்துக்கு அரசு ரூ.5 லட்சம் நிவாரணம்

பள்ளியில் மின்சாரம் தாக்கி பலியான மாணவன்; குடும்பத்துக்கு அரசு ரூ.5 லட்சம் நிவாரணம்

பள்ளியில் மின்சாரம் தாக்கி பலியான மாணவன்; குடும்பத்துக்கு அரசு ரூ.5 லட்சம் நிவாரணம்

3


ADDED : ஜன 25, 2025 02:56 PM

Google News

ADDED : ஜன 25, 2025 02:56 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:பள்ளியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவன் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பொய்யாவயல் அரசு உயர்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு மாணவர் கணினி அறிவியல் வகுப்பு நடந்துகொண்டிருந்தபோது, கணினியை இணைக்க முயன்றபோது, மாணவர் மீது மின்சாரம் பாய்ந்தது.

மாணவர் சிகிச்சைக்காக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

மாணவரின் மரணம் தொடர்பான காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக ,மாணவரின் பெற்றோரிடம் உரிய தகவல்கள் தெரியப்படுத்தவில்லை என்று அ.ம.மு.க., பொதுசெயலாளர் தினகரன், பள்ளி நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து உயிரிழந்த மாணவன் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இந்நிலையில், தமிழக அரசு சார்பில் அமைச்சர் பெரியகருப்பன் உள்ளிட்ட அதிகாரிகள், பள்ளியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவன் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கினர்.






      Dinamalar
      Follow us