sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

முட்டாள்களின் முகவரியாக தமிழகம் * அன்புமணிக்கு ராஜா கண்டனம்

/

முட்டாள்களின் முகவரியாக தமிழகம் * அன்புமணிக்கு ராஜா கண்டனம்

முட்டாள்களின் முகவரியாக தமிழகம் * அன்புமணிக்கு ராஜா கண்டனம்

முட்டாள்களின் முகவரியாக தமிழகம் * அன்புமணிக்கு ராஜா கண்டனம்


ADDED : ஏப் 02, 2025 09:47 PM

Google News

ADDED : ஏப் 02, 2025 09:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழகத்தில் ஆலை அமைக்க திட்டமிட்டிருந்த பி.ஒய்.டி., கார் தயாரிப்பு நிறுவனம், தெலுங்கானா மாநிலத்திற்கு சென்று விட்டதாகவும், அந்த முதலீட்டை தமிழகம் இழந்து விட்டதாகவும், சமீபத்தில், பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக காஞ்சிபுரத்தில் தமிழக தொழில் துறை அமைச்சர் ராஜா அளித்த பேட்டி:

தெலுங்கானாவில் ஆலை அமைக்கவில்லை என, பி.ஒய்.டி., நிறுவனமே தெரிவித்து விட்டது. எந்த ஒரு முதலீடும் தமிழகத்தில் இருந்து வெளியே செல்ல வாய்ப்பில்லை. இந்திய அளவில் முதலீட்டாளர்கள் முதலில் வரும் இடம் தமிழகம் தான். இங்கு தான், அனைத்து உள்கட்டமைப்புகளும், அரசின் முழு ஆதரவும் உள்ளது.

எதிர்க்கட்சி தலைவர்கள் பொய் செய்திகளை பரப்புவது, கீழ்த்தரமான செயல் இந்தியாவில் வரும் முதலீடுகள் அனைத்தும் தமிழகத்திற்கு வரும் என்றில்லை. பொய் செய்திகளை பரப்பி, வரக்கூடிய முதலீடுகளை திசை திருப்பும் வேலையை செய்யக்கூடாது.

தொடர்ந்து, இதேபோல் பேசி கொண்டே இருப்பதை பார்த்தால், தமிழகத்திற்கு வரும் முதலீடுகளை, வேறு மாநிலத்திற்கு கொண்டு செல்ல ஆசைப்படுகின்றனரோ என்று நினைக்கிறேன். முதலீட்டாளர்களின் முகவரியாக தமிழகம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us