ADDED : பிப் 12, 2025 04:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா நடைபெறும் நிலையில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை காவடி எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தார்.
பழநி திருஆவினன்குடியில் சுவாமி தரிசனம் செய்த பின், முருகன் கோவிலுக்கு படிபாதை வழியாக காவடியுடன் சென்றார். பக்தர்கள் வெளியேறும் பாதையில் சென்ற போது, அவரை போலீசார் தடுத்தனர். பேச்சுக்கு பின் அனுமதித்தனர். படிப்பாதையில் சென்ற அவரை, முருக பக்தர்கள் வரவேற்று கைகுலுக்கினர்.