sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரேஷன் கார்டுக்கு தலா ரூ.5,000; தீபாவளி நாளில் அறிவிக்கிறது தமிழக அரசு

/

ரேஷன் கார்டுக்கு தலா ரூ.5,000; தீபாவளி நாளில் அறிவிக்கிறது தமிழக அரசு

ரேஷன் கார்டுக்கு தலா ரூ.5,000; தீபாவளி நாளில் அறிவிக்கிறது தமிழக அரசு

ரேஷன் கார்டுக்கு தலா ரூ.5,000; தீபாவளி நாளில் அறிவிக்கிறது தமிழக அரசு

50


UPDATED : ஆக 21, 2025 10:28 AM

ADDED : ஆக 21, 2025 03:32 AM

Google News

UPDATED : ஆக 21, 2025 10:28 AM ADDED : ஆக 21, 2025 03:32 AM

50


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, 2026 பொங்கல் பரிசு தொகுப்பாக, ரேஷன் கார்டுக்கு தலா, 5,000 ரூபாய் வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

'நாட்டு மக்களுக்கு தீபாவளியன்று மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது. ஜி.எஸ்.டி., வரி குறைக்கப்படும். அத்தியாவசிய பொருட்கள் மீதான வரிகள் குறைக்கப்படும்' என, பிரதமர் மோடி சுதந்திர தினத்தன்று அறிவித்ததற்கு போட்டியாக, பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பை, தீபாவளி நாளில் தமிழக அரசு வெளியிட உள்ளது.



இதற்கு, 10,000 கோடி ரூபாய் தேவை என்பதால், அதற்கான நிதி ஏற்பாட்டை மேற்கொள்ளுமாறு, நிதித்துறையை அரசு அறிவுறுத்தி உள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு, ரேஷன் கடைகள் வாயிலாக, 2.20 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. வரும், 2026 சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் ஏழு மாதங்களே உள்ளன. இந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து, 200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க, ஆளும் கட்சியான தி.மு.க., முடிவு செய்துள்ளது.

இதற்காக, வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில், வரும் பொங்கலுக்கு கார்டுதாரர்களுக்கு தலா, 5,000 ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:


தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரு மாதங்கள் உள்ளன. ஆனால், அதற்கு முன்னதாகவே டில்லியில் சமீபத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, 'நாட்டு மக்களுக்கு தீபாவளியன்று மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது. ஜி.எஸ்.டி., வரி குறைக்கப்படும். அத்தியாவசிய பொருட்கள் மீதான வரிகள் குறைக்கப்படும்' என, அறிவித்தார்.

இந்த அறிவிப்பை பற்றி தான் தற்போது பலரும் பேசி வருகின்றனர். அதனுடன் போட்டி போடும் வகையில், பொங்கலுக்கு இரு மாதங்களுக்கு முன்பே, அதாவது அக்டோபரில் தீபாவளி சமயத்தில், பொங்கல் பரிசாக, 5,000 ரூபாய் வழங்கும் அறிவிப்பை, தமிழக அரசு வெளியிட உள்ளது.

இதனால் அரசுக்கு, 10,000 கோடி ரூபாய் செலவாகும். அதற்கான நிதி திரட்டும் பணிகளில் கவனம் செலுத்தி, அவசியம் இல்லாத செலவுகளை குறைத்து, நிதி ஒதுக்கீடு செய்வதற்கு வழிவகை மேற்கொள்ளுமாறு, நிதித்துறையை அரசு அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பொங்கல் பரிசு வரலாறு

ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி, 2006 - 11 தி.மு.க., ஆட்சியில் துவக்கப்பட்டது. அப்போது, சர்க்கரை பொங்கல் தயாரிக்க பயன்படும் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்டை, ஏலக்காய் ஆகியவை, குறிப்பிட்ட எடையில் வழங்கப்பட்டன. பின், 2011 - 16 அ.தி.மு.க., ஆட்சியில், தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, 100 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. கடந்த, 2016 - 21 அ.தி.மு.க., ஆட்சியில், மளிகை தொகுப்புடன், 1,000 ரூபாய் வழங்கப்பட்டது.
குறிப்பாக, கடந்த, 2021 பொங்கலுக்கு, அந்தாண்டில் நடந்த சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கார்டுதாரர்களுக்கு தலா, 2,500 ரூபாய் வழங்கப்பட்டது. பின், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், 2022ல், பொங்கலுக்கு, 500 ரூபாய் மதிப்புள்ள மளிகை தொகுப்பு வழங்கப்பட்டது. அடுத்த இரு ஆண்டுகளுக்கு தலா, 1,000 ரூபாய் ரொக்கமும், பச்சரிசி, சர்க்கரை, கரும்பு வழங்கப்பட்டது. இந்தாண்டு பொங்கலுக்கு ரொக்கம் இல்லாமல் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு வழங்கப்பட்டன.



வாழ்த்து உண்டா?

விநாயகர் சதுர்த்தி, தீபாவளி உள்ளிட்ட ஹிந்து பண்டிகைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறுவதில்லை. ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டும் என முதல்வரை ஹிந்து அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதை தமிழக பாஜ குற்றச்சாட்டாக சொல்லி வருகிறது. தற்போது தீபாவளி வாழ்த்தும் இடம்பெறுமா என்ற கேள்வி எழுந்து உள்ளது.








      Dinamalar
      Follow us