sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பிற மாநிலங்களுக்கு தமிழகம் வழிகாட்டி: அமைச்சர் பெருமிதம்

/

பிற மாநிலங்களுக்கு தமிழகம் வழிகாட்டி: அமைச்சர் பெருமிதம்

பிற மாநிலங்களுக்கு தமிழகம் வழிகாட்டி: அமைச்சர் பெருமிதம்

பிற மாநிலங்களுக்கு தமிழகம் வழிகாட்டி: அமைச்சர் பெருமிதம்


ADDED : செப் 26, 2025 08:26 PM

Google News

ADDED : செப் 26, 2025 08:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:''இந்தியாவில் பிற மாநிலங்களுக்கு எல்லாம் வழிகாட்டியாகவும், முன்னோடியாகவும் தமிழகம் திகழ்கிறது,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை, கிண்டியில் உள்ள தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின், 'பல்கலை ஆராய்ச்சி நாள் - அறிவேள்வி -- 2025' விழா நேற்று நடந்தது. இதில், மருத்துவ ஆராய்ச்சி புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு சான்றிதழ்கள், விருதுகளை, அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கினார்.

பின், அமைச்சர் பேசியதாவது:

தமிழக மக்கள் நல்வாழ்வு துறை, இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு எல்லாம் வழிகாட்டியாகவும், முன்னோடியாகவும் திகழ்ந்து வருகிறது. பல்கலை ஆராய்ச்சி தின விழாவில், மருத்துவம் மற்றும் பல்வேறு சுகாதார துறைகளின் மாணவர்கள் இணைந்துள்ளது, பல்துறை ஆராய்ச்சியை ஊக்குவிக்கும். மேலும், சிகிச்சை முறைகளில் உள்ள பிரச்னைகளுக்கு நவீன தீர்வுகளை கண்டுபிடிக்க வழிவகுக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பல்கலை துணை வேந்தர் கே.நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us