sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'மதுவால் பேரழிவை சந்திக்கும் தமிழகம்!'

/

'மதுவால் பேரழிவை சந்திக்கும் தமிழகம்!'

'மதுவால் பேரழிவை சந்திக்கும் தமிழகம்!'

'மதுவால் பேரழிவை சந்திக்கும் தமிழகம்!'


ADDED : ஜன 05, 2024 10:47 PM

Google News

ADDED : ஜன 05, 2024 10:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே, வயலில் மது குடித்த இளைஞர்களை தட்டிக் கேட்ட சரவணன் என்ற விவசாயி குத்திக் கொல்லப்பட்டுள்ளார். பொது இடங்களில் மது குடித்தது மட்டுமின்றி, அதை தட்டிக் கேட்டவரை கொல்லும் அளவுக்கு துணிச்சல் ஏற்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இந்த படுகொலைக்கு, தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும். மது குடிப்பதை முழு நேரத் தொழிலாக மாற்றியிருப்பது,தமிழகத்தை ஆண்ட, ஆளும் கட்சிகளின் சாதனை. தர்மபுரி மட்டுமல்ல, தமிழகம் முழுதும் இதே அவலம் தான் நீடிக்கிறது. மதுவும், போதையும் தமிழகத்தின் பொது அடையாளங்களாகி விட்டன. பேரழிவுப் பாதையில்தமிழகம் வேகமாக வெற்றிநடை போடுகிறது.

இதுதான் திராவிட மாடலா என்பதை, தமிழக அரசு தான் விளக்க வேண்டும்.மதுவையும், கஞ்சாவையும் ஒழிக்காமல், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துவதாலோ, ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு உள்நாட்டு உற்பத்தி மதிப்பை உயர்த்த இலக்கு நிர்ணயிப்பதாலோ, எந்த பலனும் ஏற்படப் போவதில்லை.

- அன்புமணி,

பா.ம.க., தலைவர்.






      Dinamalar
      Follow us