sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழக கோரிக்கை ஏற்பு 19 லட்சம் டன் அரிசிக்கு ஒப்புதல் 

/

தமிழக கோரிக்கை ஏற்பு 19 லட்சம் டன் அரிசிக்கு ஒப்புதல் 

தமிழக கோரிக்கை ஏற்பு 19 லட்சம் டன் அரிசிக்கு ஒப்புதல் 

தமிழக கோரிக்கை ஏற்பு 19 லட்சம் டன் அரிசிக்கு ஒப்புதல் 


ADDED : ஜூலை 05, 2025 11:43 PM

Google News

ADDED : ஜூலை 05, 2025 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழக கோரிக்கையை ஏற்று, கொள்முதல் செய்த நெல்லை, 16 லட்சம் டன் அரிசியாக மாற்ற அளித்திருந்த அனுமதியை, 19 லட்சம் டன்னாக உயர்த்தி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் சார்பில், தமிழக விவசாயிகளிடம் இருந்து நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்கிறது.

இந்த நெல் அரிசியாக மாற்றப்பட்டு, ரேஷனில் வழங்கப்படுகிறது.

இதில் செப்., முதல், மார்ச் வரையான கரீப் பருவத்தில், 16 லட்சம் டன் அரிசி கிடைக்கும் வகையில், 24 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய, மத்திய அரசு அனுமதித்தது.

அதை விட அதிகமாக, 28 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அதற்கு ஏற்ப அரிசி அளவை, 19.24 லட்சம் டன்னாக உயர்த்த அனுமதிக்குமாறு, மத்திய உணவு துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷியிடம், டில்லியில் ஜூன் 25ல், அமைச்சர் சக்கரபாணி கோரிக்கை வைத்தார்.

பத்து நாட்களில் அரிசி இருப்பை, 19.24 லட்சம் டன்னாக அதிகரித்து, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இது தவிர, தமிழக அரசின் கோரிக்கை ஏற்று, விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல்லுக்கு, 810 கோடி ரூபாய் வழங்கியதற்காக, மத்திய அரசுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும், நெல் மற்றும் அரிசி உற்பத்தியாளர்கள் சம்மேளன நிர்வாக இயக்குநர் அம்ருதீன் ேஷக் தாவூது நன்றி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us