sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

டாஸ்மாக் வழக்கு :சொத்துகளுக்கு 'சீல்' வைக்க அதிகாரம் இல்லை சென்னை ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை ஒப்புதல்

/

டாஸ்மாக் வழக்கு :சொத்துகளுக்கு 'சீல்' வைக்க அதிகாரம் இல்லை சென்னை ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை ஒப்புதல்

டாஸ்மாக் வழக்கு :சொத்துகளுக்கு 'சீல்' வைக்க அதிகாரம் இல்லை சென்னை ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை ஒப்புதல்

டாஸ்மாக் வழக்கு :சொத்துகளுக்கு 'சீல்' வைக்க அதிகாரம் இல்லை சென்னை ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை ஒப்புதல்


ADDED : ஜூன் 19, 2025 12:24 AM

Google News

ADDED : ஜூன் 19, 2025 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச்சட்டத்தின் கீழ், வீடு, அலுவலகம் போன்ற சொத்துகளுக்கு, 'சீல்' வைக்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லை' என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில், அமலாக்கத் துறை ஒப்புக்கொண்டுள்ளது.

'டாஸ்மாக்' கொள்முதல் விவகாரம் தொடர்பாக, மே 16ல், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில், அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. பின், விக்ரம் ரவீந்திரனின் வீடு, அலுவலகத்துக்கு, 'சீல்' வைத்தனர்.

அமலாக்கத் துறை சோதனையை எதிர்த்தும், அதை சட்ட விரோதமானது என்று அறிவிக்கக் கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோர், தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு, 'டாஸ்மாக்' முறைகேடு விவகாரத்தில், மனுதாரர்களுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய, அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத் துறை தரப்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அமலாக்கத் துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு ஆஜராகி, ''சட்ட விரோத பணப்பரிமாற்றத் தடைச்சட்டத்தின்படி, சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக நம்புவதற்கு உரிய காரணங்கள் இருந்தாலும், சந்தேகிப்பதற்கு காரணங்கள் இருந்தாலும், சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனைகள் நடத்த முடியும். அதற்கு சட்டப்பிரிவு 17 அனுமதிக்கிறது. இந்த வழக்கை பொறுத்தவரை, ஏற்கனவே பதியப்பட்ட, 41 முதல் தகவல் அறிக்கைகள் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது,'' என்றார்.

அதைக் கேட்ட நீதிபதிகள், 'சோதனை முடிவில் ஒரு சொத்துக்கு, 'சீல்' வைக்க, அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளதா; சீல் வைக்க எந்த சட்டவிதி அனுமதித்தது' என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு பதிலளித்து வாதாடியதாவது:

அமலாக்கத் துறைக்கு அத்தகைய அதிகாரங்கள் இல்லை. எனினும், பி.எம்.எல்.ஏ., எனும் சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச்சட்ட பிரிவு 17-ன்படி, பூட்டிய பெட்டி, 'லாக்கர்' போன்றவற்றை உடைத்து திறக்க, அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இருக்கிறது. தற்போதைய வழக்கில், அத்தகைய நடவடிக்கையை அமலாக்கத் துறை எடுக்கவில்லை.

அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனைக்கு சென்றபோது, மனுதாரர்களின் வீடு, அலுவலகங்கள் பூட்டப்பட்டு இருந்தால், 'நோட்டீஸ்' ஒட்டப்பட்டது. இதுதொடர்பான நோட்டீசை திரும்பப் பெறவும், மனுதாரர்களிடம் பறிமுதல் செய்த மின்னணு சாதனங்களை திரும்ப ஒப்படைக்கவும் தயாராக இருக்கிறோம். அதை பதிவு செய்து, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும். வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய, அவகாசம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் கூறியதாவது:

'சீல்' வைக்கவே அதிகாரம் இல்லாதபோது, மனுதாரர்கள் தங்கள் சொத்துகளை பயன்படுத்த, அமலாக்கத் துறை அனுமதி அளிக்கும் என்று கூறுவதன் வாயிலாக, அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இருப்பதாக, ஒரு அனுமானம் ஏற்படும்.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆதாரங்களுக்கும், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் முன்வைக்கும் வாதத்துக்கும் ஒத்துப் போகவில்லை. மனுதாரர்களுக்கு தொடர்பு உள்ளது என்று, நம்புவதற்கு காரணமான ஆவணங்களை, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி, அமலாக்கத் துறையிடம் கேட்டிருந்தோம். ஆனால், தாக்கல் செய்தது அதுவல்ல.

டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அதன் முடிவுக்கு காத்திருக்காமல், மற்றவர்கள் மீது சோதனை நடத்த, அமலாக்கத் துறை சென்றது ஏன்?

இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பின், இந்த வழக்கின் இடைக்கால உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து, பிரதான மனுவுக்கு நான்கு வாரத்தில் அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us