sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் பிரச்னையை கேட்க குழு அமைத்தது 'டாஸ்மாக்' 

/

காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் பிரச்னையை கேட்க குழு அமைத்தது 'டாஸ்மாக்' 

காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் பிரச்னையை கேட்க குழு அமைத்தது 'டாஸ்மாக்' 

காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் பிரச்னையை கேட்க குழு அமைத்தது 'டாஸ்மாக்' 


ADDED : செப் 02, 2025 02:06 AM

Google News

ADDED : செப் 02, 2025 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மதுக்கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தால் ஏற்படும் பணிச்சுமை உள்ளிட்டவை தொடர்பாக,ஊழியர்களிடம் கருத்து கேட்க, மண்டல அளவிலான குழுக்களை, 'டாஸ்மாக்' நிறுவனம் அமைத்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, மதுக்கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை, 'டாஸ்மாக்' அமல்படுத்த உள்ளது. முதற்கட்டமாக, நீலகிரி, நாகை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

இதன் வாயிலாக, கடைகளில் மது பாட்டில் விற்கும் போது, அதன் அதிகபட்ச சில்லரை விலையுடன் கூடுதலாக, 10 ரூபாய் வசூலிக்கப்படும். பாட்டிலை திரும்ப வழங்கியதும் கூடுதலாக பெற்ற தொகை திரும்ப தரப்படும். இத்திட்டத்தால், கடை ஊழியர்களுக்கு பணிச்சுமை ஏற்படுவதாக நிர்வாகத்திற்கு தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.

எனவே, காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தால், ஊழியர்களுக்கு ஏற்படும் பணிச்சுமையை அறியவும், அதை எவ்வாறு சரி செய்வது என்பதற்கான யோசனை வழங்கவும், மண்டல அளவில் குழுக்களை டாஸ்மாக் நிறுவனம் அமைத்துள்ளது.

அதன்படி, சென்னை மண்டலத்திற்கு, முதுநிலை மண்டல மேலாளர் தலைவர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில், திருவள்ளூர் மேற்கு, சென்னை மத்திய மாவட்ட மேலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இதேபோல, கோவை, மதுரை, சேலம், திருச்சியிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இக்குழுக்கள், தங்கள் மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மாவட்டங்களில் உள்ள மது கடை ஊழியர்களிடம் கருத்து கேட்டு, அதை தலைமை அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

இதற்கிடையே, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலுார், தஞ்சை, சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில், காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் நேற்று அமல்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்குள்ள டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, டாஸ்மாக் பணியாளர்கள் சங்க பொதுச்செயலர் தனசகேரன் கூறுகையில், ''காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்திற்கு, தனி ஊழியர்களை நியமிக்க வேண்டும். கடைகளில் கட்டமைப்பு வசதி ஏற்படுத்த வேண்டும். அதன்பின் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்,'' என்றார்.

காஞ்சிபுரம் மதுக்கடைகளில் ஊழியர்களுடன் வாக்குவாதம் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரத்தில் மாவட்ட டாஸ்மாக் மண்டல அலுவலகம் எதிரே நேற்று, ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், வழக்கமாக பகல் 12:00 மணிக்கு திறக்கப்படும் டாஸ்மாக் மதுக்கடைகள், பல இடங்களில் நேற்று மதியம் 2:00 மணி வரை திறக்கப்படவில்லை. குறிப்பாக, வாலாஜாபாத், புளியம்பாக்கம், ஊத்துக்காடு உள்ளிட்ட பகுதிகளில், மதுக்கடைகள் திறக்கப்படாததால் மதுப்பிரியர்கள் திண்டாடினர். மேலும், பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் குறித்தும், ஊழியர்களின் போராட்டம் குறித்தும் அறியாத வாடிக்கையாளர்கள், இனி மாதம்தோறும் 1ம் தேதி மதுக்கடைகளுக்கு விடுமுறை என பரவிய வதந்தியையும் நம்பி, வீட்டிற்கு சென்றனர். மதியம் 2:00 மணிக்கு மேல் மதுக்கடைகள் செயல்பட துவங்கிய நிலையில், மது பாட்டிலுக்கு, 10 ரூபாய் கூடுதலாக வசூலித்ததால், மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 10 ரூபாய் கூடுதலாக அளித்து மது பாட்டில் பெற்று, காலி பாட்டில் திரும்ப தந்தால், 10 ரூபாயை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என, விற்பனையாளர்கள் விளக்கம் அளித்தனர். எனினும், தாங்கள் வீட்டுக்கு சென்று மது அருந்திய பின், மறுபடியும் காலி பாட்டில் கொண்டு வர வாய்ப்பில்லை எனக்கூறி, மது பிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ***








      Dinamalar
      Follow us