sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

8 ரயில்களுக்கு ஊஞ்சலுாரில் தற்காலிக நிறுத்தம்

/

8 ரயில்களுக்கு ஊஞ்சலுாரில் தற்காலிக நிறுத்தம்

8 ரயில்களுக்கு ஊஞ்சலுாரில் தற்காலிக நிறுத்தம்

8 ரயில்களுக்கு ஊஞ்சலுாரில் தற்காலிக நிறுத்தம்


ADDED : நவ 12, 2025 01:50 AM

Google News

ADDED : நவ 12, 2025 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, 'சேஷாத்ரி ஸ்வாமிகள் 97வது ஆராதனை ஆண்டு விழாவையொட்டி, எட்டு விரைவு ரயில்கள் ஊஞ்சலுாரில் தற்காலிகமாக நின்று செல்லும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே அறிக்கை:

ஈரோடு மாவட்டம், ஊஞ்சலுாரில், சேஷாத்ரி ஸ்வாமிகள் 97வது ஆராதனை ஆண்டு விழா நடக்க உள்ளது. இதனால், இந்த வழியாக செல்லும் விரைவு ரயில்களுக்கு, வரும் ஜன., 6 முதல் 12ம் தேதி வரை, ஊஞ்சலுாரில் தற்காலிகமாக நின்று செல்ல அனுமதிக்கப்படுகிறது.

அதன்படி, கடலுார் போர்ட் - கர்நாடகா மாநிலம் மைசூரு, மைசூரு - கடலுார் போர்ட், துாத்துக்குடி - மைசூரு, மைசூரு - துாத்துக்குடி, நாகர்கோவில் - கோவை, கோவை - நாகர் கோவில், கேரளா மாநிலம் பாலக்காடு டவுன் - திருச்சி, திருச்சி - பாலக்காடு ஆகிய, எட்டு விரைவு ரயில்கள், ஊஞ்சலுாரில் தலா ஒரு நிமிடம் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us