ADDED : பிப் 05, 2026 03:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி மத்திய காவல் நிலைய காவலர் நசீர் அகமது, கஞ்சா மொத்த வணிகம் செய்தததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் கஞ்சா வாங்கி பயன்படுத்தியதாக, காவலர்கள் அபிசேகரன், மாயக்கண்ணன், சாந்தகுமார் ஆகியோர், 'சஸ்பெண்ட்' செய்யப் பட்டுள்ளனர்.
வேலியே பயிரை மேய்வதைப் போல காவலர்களே கஞ்சா வணிகம் செய்தால், கஞ்சாவை எப்படி கட்டுப்படுத்த முடியும்? இன்னொரு புறம், சென்னை வியாசர்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவரின் புத்தகப் பையில் கஞ்சா பொட்டலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு தி.மு.க., ஆட்சியில் கஞ்சா சாம்ராஜ்யம் கொடிகட்டிப் பறக்கிறது.
-- அன்புமணி, தலைவர், பா.ம.க.,

