ADDED : செப் 27, 2025 05:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அ.தி.மு.க., ஒன்றிணைய வேண்டும் என்பதற்காக பாடுபட்டு வருகிறேன். இதற்காக, நான் சென்னை சென்று, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் உள்ளிட்டோரை சந்தித்ததாக செய்தி பரப்புகின்றனர். சென்னைக்கு சென்றது உண்மை.
அங்கு இருக்கும் என் மனைவியை சந்திக்க சென்றேன். அரசியலுக்காக யாரையும் சந்திக்கவில்லை. இப்படி செய்தி பரப்பி, அவப்பெயர் ஏற்படுத்த முயல்கின்றனர். இதனால், அ.தி.மு.க., தலைமை கோபமாகி என் மீது நடவடிக்கை எடுக்கும் என, சிலர் இதுபோன்று செய்கின்றனர். இப்பவும் சொல்கிறேன். மக்கள், தொண்டர்கள், கட்சி ஆகியவை தான் என் உயிர் மூச்சு. கட்சிக்கு எதிராக செயல்பட மாட்டேன்.
- செங்கோட்டையன்
முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,