ADDED : ஜன 05, 2026 02:55 AM

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே பனஹள்ளி கிராமத்தில், ஹிந்து பழங்குடி இன மக்களுக்கான 8.75 ஏக்கர் மயான பூமியை, முஸ்லிம்கள் ஆக்கிரமித்துள்ளனர். அங்குள்ள மக்கள் போராடி வருகின்றனர். ஹிந்துக்கள், 11 பேர் மீது போலீசார் பொய் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். தமிழக அரசில் எங்கெல்லாம் முஸ்லிம், கிறிஸ்துவ அதிகாரிகள் உள்ளனரோ, அவர்கள் அந்தந்த மதத்தினருக்கு சாதகமாக செயல்படுகின்றனர். ஹிந்து அதிகாரிகள் அப்படி இருப்பதில்லை.
ஹிந்துக்களுக்கு விரோதமாக, ஒருதலைபட்சமாக தி.மு.க., அரசு நடக்கிறது. நீதிமன்ற தீர்ப்பையும் மதிப்பதில்லை. திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றினால், சோறு கிடைக்குமா என ஒருவர் கேட்கிறார். திருப்பூர் பஸ் ஸ்டாண்டுக்கு, தியாகி குமரன் பெயருக்கு பதில் கருணாநிதி பெயரை வைக்கின்றனர். இதனால், அவர்களுக்கு சோறு கிடைத்துவிடுமா என்பது தெரியவில்லை.
- காடேஸ்வரா சுப்ரமணியம், தலைவர், ஹிந்து முன்னணி

