sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருச்செந்துார்,- ராமேஸ்வரத்திற்கு 3 நாள் ஆன்மிக சுற்றுலா துவக்கம்

/

திருச்செந்துார்,- ராமேஸ்வரத்திற்கு 3 நாள் ஆன்மிக சுற்றுலா துவக்கம்

திருச்செந்துார்,- ராமேஸ்வரத்திற்கு 3 நாள் ஆன்மிக சுற்றுலா துவக்கம்

திருச்செந்துார்,- ராமேஸ்வரத்திற்கு 3 நாள் ஆன்மிக சுற்றுலா துவக்கம்


ADDED : ஜன 28, 2025 08:34 AM

Google News

ADDED : ஜன 28, 2025 08:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், திருச்செந்துார், ராமேஸ்வரத்திற்கு, மூன்று நாள் ஆன்மிக சுற்றுலா துவக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் சுற்றுலா செல்ல விரும்புவோருக்காக, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். பல்வேறு ஆன்மிக சுற்றுலாக்களும் உள்ளன. அந்த வரிசையில், திருச்செந்துார், ராமேஸ்வரம் மூன்று நாள் ஆன்மிக சுற்றுலா புதிதாக துவக்கப்பட்டு உள்ளது. அதற்கான முன்பதிவு துவங்கியுள்ளது.

இந்த சுற்றுலாவில், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை, 5:-00 மணிக்கு, சென்னை வாலாஜா சாலையில் உள்ள, சுற்றுலாத்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து, சொகுசு பஸ்சில் முன்பதிவு செய்வோர் அழைத்துச் செல்லப்படுவர். சுற்றுலா முடிந்து திங்கள் கிழமை மீண்டும் சென்னை அழைத்து வரப்படுவர்.

மூன்று நாள் ஆன்மிக சுற்றுலாவில், வெள்ளிக்கிழமை மாலை புறப்பட்டு சனிக்கிழமை காலை திருச்செந்துார் சென்று, அங்கு சுற்றுலா வளர்ச்சிக் கழக ஹோட்டலில் தங்க வைக்கப்படுவர். காலை உணவிற்குப் பிறகு, சுவாமி தரிசனத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர். தரிசனம் முடிந்த பிறகு மதிய உணவு வழங்கப்படும். பின் அங்கிருந்து புறப்பட்டு, ராமநாதபுரம் உத்திரகோசமங்கை மங்களநாதர் கோவில் சென்று சுவாமி தரிசனம் செய்வர்.

அன்று இரவு புறப்பட்டு ஞாயிறு காலை இராமேஸ்வரம் செல்வர். அங்குள்ள சுற்றுலா வளர்ச்சிக் கழக ஹோட்டலில் காலை உணவிற்குப் பின், ராமநாத சுவாமி கோவிலுக்கு செல்வர். சுவாமி தரிசனத்திற்கு பிறகு, தனுஷ்கோடியை பார்வையிடலாம். இரவு அங்கிருந்து புறப்பட்டு, திங்கள் காலை சென்னை வருவர். நபர் ஒருவருக்கு கட்டணம், 12,300 ரூபாய்.

மேலும் விபரங்களை, www.ttdconline.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us