sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பாதிக்கப்பட்டவர்கள் மீது எதிர் வழக்கு தொடுக்கும் போலீஸ் மீது நடவடிக்கை தமிழக அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

/

பாதிக்கப்பட்டவர்கள் மீது எதிர் வழக்கு தொடுக்கும் போலீஸ் மீது நடவடிக்கை தமிழக அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

பாதிக்கப்பட்டவர்கள் மீது எதிர் வழக்கு தொடுக்கும் போலீஸ் மீது நடவடிக்கை தமிழக அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

பாதிக்கப்பட்டவர்கள் மீது எதிர் வழக்கு தொடுக்கும் போலீஸ் மீது நடவடிக்கை தமிழக அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்


ADDED : ஜூலை 01, 2025 03:52 AM

Google News

ADDED : ஜூலை 01, 2025 03:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவனியாபுரம்: ''பாதிக்கப்பட்ட மக்கள் மீது எதிர் வழக்கு தொடுக்கும் போலீஸ் அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: தமிழகம் முழுவதும் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் நிகழும் போது போலீசார், எதிர்தரப்பினரிடமும் மனு பெற்று பாதிக்கப்பட்ட மக்கள் மீது வழக்குப்பதிவு செய்வது இன்னும் தொடர்கிறது. இது தலித் விரோத நடவடிக்கை. பாதிக்கப்பட்ட தலித்துகள் மீது வழக்கு தொடுப்பது என்பது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்ற செயலாகும். பாதிக்கப்பட்ட மக்கள் மீது எதிர் வழக்கு தொடுக்கும் போலீஸ் அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அமைச்சர் அமித்ஷா மட்டும் தான் திரும்பத் திரும்ப கூட்டணி ஆட்சி என்ற கருத்தை கூறி வருகிறார். அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி எந்த கருத்தையும் கூறாமல் மவுனம் காக்கிறார் என குறிப்பிட்டு இருந்தேன். தற்போது அவர் அதற்கு விடை அளித்திருக்கிறார். அவர் சொல்லியிருக்கும் பதில் பா.ஜ., வுக்குத் தான். கூட்டணி ஆட்சி இல்லை. அ.தி.மு.க., அதற்கு உடன்படாது என்ற விடையை பா.ஜ., வினருக்குத்தான் கூறியிருக்கிறார். அதேபோல் அ.தி.மு.க., வை எந்த கொம்பனாலும் கபளீகரம் செய்ய முடியாது என்ற கருத்தையும் பதிவு செய்திருக்கிறார். கபளீகரம் செய்வதற்கு யார் முயற்சிக்கிறார்கள் என்பதையும் அவர் தெளிவுபடுத்த வேண்டும். பாஜ.,வுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் இணைப்பு உள்ளதே தவிர பிணைப்பு இருப்பதாக தெரியவில்லை.

அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து பா.ஜ., விலகினால் விடுதலைச் சிறுத்தைகள் சேருமா என்ற யூகத்திற்கு, அப்படி ஒரு நிலை எழும் போது பதில் சொல்கிறேன்.

திடீரென பா.ம.க., ராமதாஸ் மீது திருமாவளவனுக்கு என்ன பாசம் என அன்புமணி கூறியுள்ளார். அக்கட்சி எப்படியாவது போகட்டும் என்று நான் கருதவில்லை. யாரோ சொல்வதை கேட்பதைவிட தந்தை சொல்வதை கேளுங்கள் என்று ஒரு பொறுப்பான வார்த்தையாகத்தான் பாசம் என்பதை குறிப்பிட்டேனே தவிர பிணைப்பான வார்த்தையாக சொல்லவில்லை என்றார்.






      Dinamalar
      Follow us