sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மனு கொடுக்க வந்தவர்கள் காரில் கத்திகள் கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

/

மனு கொடுக்க வந்தவர்கள் காரில் கத்திகள் கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

மனு கொடுக்க வந்தவர்கள் காரில் கத்திகள் கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

மனு கொடுக்க வந்தவர்கள் காரில் கத்திகள் கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு


ADDED : நவ 19, 2024 07:37 AM

Google News

ADDED : நவ 19, 2024 07:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தவர்கள் காரில் கத்திகள் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு கொடுக்க வந்தனர்.

முன்னதாக, அலுவலக நுழைவாயிலில், பொதுமக்கள் யாரேனும் மருந்து, மண்ணெண்ணெய், பெட்ரோல் உள்ளிட்டவை எடுத்து வந்துள்ளனரா என போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு வந்த காரை மடக்கி சோதனை செய்தபோது, அதில் 5 கத்திகள் இருந்தது தெரியவந்தது. போலீசார் காரில் இருந்த 4 பேரிடம் விசாரித்தனர்.

அவர்கள், கடலுார் அடுத்த சங்கொலிக்குப்பத்தை சேர்ந்தவர்கள் என்பதும், விவசாய நிலத்தில் வேலை செய்வதற்காக கத்திகளை எடுத்துச் செல்வதாக கூறினர். சங்கொலிக்குப்பத்தில் புறவழிச்சாலை பணி காரணமாக பஸ்கள் நிற்காமல் செல்வதாகவும், பயணிகள் நிழற்குடை அமைத்து பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கக்கோரி மனு கொடுக்க வந்ததாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து, கலெக்டர் அலுவலகத்திற்கு கத்திகளுடன் வரக்கூடாது என, அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us