sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று


ADDED : ஜன 29, 2024 11:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2024 11:10 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜனவரி 30, 1927

திருநெல்வேலி மாவட்டம், வாழவந்தாள்புரம் எனும் கிராமத்தில், படிக்கராமர் - வாழந்தம்மை தம்பதிக்கு மகனாக, 1927ல் இதேநாளில் பிறந்தவர், இளங்குமரன் எனும் கிருஷ்ணன்.இவர், பள்ளிப்பருவத்திலேயே சொற்பொழிவாற்றுவது, பாடல் இயற்றுவதில் வல்லவராக இருந்தார். 'குண்டலகேசி' எனும் காவியத்தை, மதுரை அங்கயற்கண்ணி ஆலயத்தில் அரங்கேற்றினார். சென்னை பல்கலையின் புலவர் பட்டம் பெற்று, தமிழாசிரியராக பணியாற்றினார்.

இவர் எழுதிய, 'திருக்குறள் கட்டுரைத் தொகுப்பு' நுாலை 1963ல் நேருவும், 'சங்க இலக்கிய வரிசையில் புறநானுாறு' நுாலை 2003ல் அப்துல் கலாமும் வெளியிட்டனர். திருக்குறள் சொற்பொழிவுகளையும், தமிழ் முறைப்படி திருமணம், புதுமனை

புகுவிழா, மணிவிழாக்களை நடத்தி வைத்தார். நுாற்றுக்கணக்கான தமிழ் இலக்கண, இலக்கிய ஆய்வு நுால்களை எழுதிய இவரின் நுால்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் திரு.வி.க., விருதையும் பெற்ற இவர், 2021 ஜூலை 25ல், தன், 94வது வயதில் காலமானார்.

தேவநேயப்பாவாணர், பாரதிதாசனின் படைப்புகளை சேகரித்த முதுமுனைவர் பிறந்த தினம் இன்று!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us