sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 தமிழக காங்கிரஸ் கோஷ்டிகளிடம் மேலிட பொறுப்பாளர் ஆலோசனை

/

 தமிழக காங்கிரஸ் கோஷ்டிகளிடம் மேலிட பொறுப்பாளர் ஆலோசனை

 தமிழக காங்கிரஸ் கோஷ்டிகளிடம் மேலிட பொறுப்பாளர் ஆலோசனை

 தமிழக காங்கிரஸ் கோஷ்டிகளிடம் மேலிட பொறுப்பாளர் ஆலோசனை


ADDED : டிச 16, 2025 07:25 AM

Google News

ADDED : டிச 16, 2025 07:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சட்டசபை தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து, டில்லியில் தமிழக காங்கிரஸ் முன்னணி தலைவர்களுடன், மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் ஆலோசனை நடத்தினார்.

டில்லியில் நேற்று முன்தினம் ஓட்டு திருட்டை கண்டித்து, காங்கிரஸ் சார்பில், ராகுல் தலைமையில் பேரணி நடந்தது. அதில், தமிழக காங்கிரஸ் முன்னணி தலைவர்களும், நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

தி.மு.க., கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து, தமிழக காங்கிரசின் ஐவர் குழு, முன்னாள் தலைவர்கள் மற்றும் தமிழக எம்.பி.,க்களிடம், ராகுல் ஆலோசனை நடத்துவார் என கூறப்பட்டது.

ஆனால், பேரணி முடிந்தது ம், அன்று இரவே ராகுல், ஜெ ர்மனி சென்று விட்டார். இதனால், ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், டில்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில், மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் தலைமையில் நேற்று கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.

தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டசபை காங்., தலைவர் ராஜேஷ்குமார், எம்.பி.,க்கள் மாணிக் தாகூர், கார்த்தி, விஷ்ணுபிரசாத், ராபர்ட் புரூஸ், விஜய் வசந்த் உள்ளிட்ட சிலர் மட்டும் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

கலந்துரையாடல் முடிந்த பின், தமிழகத்தில் இருந்து சென்ற மாநில நிர்வாகி கள், முன்னணி தலைவர்களை தனித்தனியாக சந்தித்து, கிரிஷ் ஷோடங்கர் கருத்துகளை கேட்டறிந்தார்.

இது குறித்து, காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 2026 சட்டசபை தேர்தலுக்கு பின் அமைந்த தி.மு.க., ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லை; காங்கிரஸ் தயவில் ஆட்சி நடந்தது.

ஆனால், தி.மு.க., ஆட்சியில் காங்கிரசுக்கு பங்கு தரவில்லை; அதற்கு பரிகாரமாக, இம்முறை ஆட்சியில் பங்கு என்ற நிபந்தனையுடன் கூட்டணி அமைக்க வேண்டும்.

அதற்கு தி.மு.க., உடன்படவில்லை என்றால், ஆட்சியில் பங்கு தர தயாராக இருக்கும் விஜய் தலைமையிலான த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என சில எம்.பி.,க்களும், பெரும்பான்மையான நிர்வாகிகளும் கிரிஷ் ஷோடங்கரிடம் வலியுறுத்தி உள்ளனர். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.

புதிய மாவட்ட தலைவர்கள் டில்லியில் இன்று முடிவு

தமிழக காங்கிரசில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, மாவட்ட தலைவர் பதவியில் சிலர் இருக்கின்றனர். அவர்களை மாற்றிவிட்டு, புதிய தலைவர்களை நியமிக்க, வெளிப்படையான தேர்வு முறையை, கட்சி மேலிடம் கொண்டு வந்துள்ளது. சமீபத்தில் மேலிட பார்வையாளர்கள் 38 பேரை, மாவட்ட தேர்தல் பார்வையாளர்களாக கட்சி மேலிடம் அனுப்பி வைத்தது. அவர்களும் நேர்காணல் நடத்தி, புதிய மாவட்ட தலைவர் பட்டியலை தயாரித்துள்ளனர். இந்நிலையில், மேலிட பார்வையாளர்கள் 38 பேர் மற்றும் தமிழக காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம், டில்லியில் இன்று இரவு நடக்கிறது. அதில், தமிழக காங்கிரசில் புதிய மாவட்ட தலைவர்கள் பட்டியல் இறுதி செய்யப்படுகிறது. அதை தொடர்ந்து, மாவட்ட தலைவர்கள் பட்டியல் வெளியாகும்.



- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us