sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பழனிசாமி மீதான வழக்கு விசாரணைக்கு தடை

/

பழனிசாமி மீதான வழக்கு விசாரணைக்கு தடை

பழனிசாமி மீதான வழக்கு விசாரணைக்கு தடை

பழனிசாமி மீதான வழக்கு விசாரணைக்கு தடை


ADDED : ஏப் 24, 2025 09:06 PM

Google News

ADDED : ஏப் 24, 2025 09:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு எதிரான அவதுாறு வழக்கு விசாரணைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

கோவை விமான நிலையத்தில், கடந்தாண்டு ஜூனில் பழனிசாமி பேட்டி அளித்தார். அப்போது, தனக்கு எதிராக அவதுாறு கருத்துகளை தெரிவித்ததாக கூறி, கோவை நீதிமன்றத்தில், பழனிசாமிக்கு எதிராக, முன்னாள் எம்.பி., - கே.சி.பழனிசாமி அவதுாறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த கோவை நீதிமன்றம், விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி பழனிசாமிக்கு, 'சம்மன்' அனுப்ப உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தனக்கு எதிரான அவதுாறு வழக்கை ரத்து செய்ய கோரியும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் பழனிசாமி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், அவதுாறு வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும், வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களித்தும் உத்தரவிட்டார்.

மேலும், நான்கு வாரங்களுக்குள் மனுவுக்கு பதில் அளிக்கும்படி, கே.சி.பழனிசாமிக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.






      Dinamalar
      Follow us