sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மத்திய அமைச்சர் அமித் ஷா பிப்., 26ல் ராமநாதபுரம் வருகை

/

மத்திய அமைச்சர் அமித் ஷா பிப்., 26ல் ராமநாதபுரம் வருகை

மத்திய அமைச்சர் அமித் ஷா பிப்., 26ல் ராமநாதபுரம் வருகை

மத்திய அமைச்சர் அமித் ஷா பிப்., 26ல் ராமநாதபுரம் வருகை


ADDED : பிப் 13, 2025 07:56 PM

Google News

ADDED : பிப் 13, 2025 07:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே புதிய பா.ஜ., மாவட்ட அலுவலகத்தை திறந்து வைக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வரும் 26ல் ராமநாதபுரம் வருகிறார். பிப்., 28ல் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி வர உள்ளதாகவும் பா.ஜ.,வினர் தெரிவித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் பழமை வாய்ந்த ரயில்வே துாக்கு பாலத்திற்கு பதிலாக, ரூ.550 கோடியில் புதிதாக பாலம் கட்டப்பட்டுள்ளது. கடலில் இருந்து 17 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலத்தில் சோதனை ஓட்டம் முடிந்து திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது.

இந்நிலையில், ராமநாதபுரத்தில் கட்டப்பட்டிருக்கும் பா.ஜ., கட்சி அலுவலகத்தை திறந்து வைக்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழகம் வருகிறார். அதேபோல, வரும் 28ல், பாம்பனில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய ரயில் பாலத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்க பிரதமர் நரேந்திர மோடி, ராமேஸ்வரத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து, ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., தலைவர் முரளிதரன் கூறுகையில், ''மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் ராமேஸ்வரம் வர உள்ளனர். பிரம்மாண்டமாக நடத்தப்படவிருக்கும் இரு நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவது குறித்து, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடந்து வருகிறது,'' என்றார்.






      Dinamalar
      Follow us