இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை
இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை
ADDED : அக் 17, 2025 02:24 PM

சென்னை: தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கிய நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனிடையே, அக்., 24ம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
இந்த கற்றாழுத்த தாழ்வு பகுதியானது, தமிழகத்தின் கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து வலுவடையக் கூடும், என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம்,
இன்று மிதமான மழை
நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தேனி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, மற்றும் காரைக்கால்
நாளை கனமழை பெய்யவுள்ள மாவட்டங்கள்
நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்
19ம் தேதி
நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்
20ம் தேதி
நீலகிரி, கோவை,தேனி,விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்
21ம் தேதி
நீலகிரி, கோவை,நாமக்கல்,திண்டுக்கல், கரூர், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்
22ம் தேதி
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்
23ம் தேதி
நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை, குமரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.