sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பாலியல் தொல்லை வழக்கு முன்னாள் ஐ.ஜி.,க்கு 'வாரன்ட்'

/

பாலியல் தொல்லை வழக்கு முன்னாள் ஐ.ஜி.,க்கு 'வாரன்ட்'

பாலியல் தொல்லை வழக்கு முன்னாள் ஐ.ஜி.,க்கு 'வாரன்ட்'

பாலியல் தொல்லை வழக்கு முன்னாள் ஐ.ஜி.,க்கு 'வாரன்ட்'


ADDED : நவ 23, 2024 09:47 PM

Google News

ADDED : நவ 23, 2024 09:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:பாலியல் தொல்லை வழக்கில் சிக்கிய, ஓய்வு பெற்ற ஐ.ஜி., முருகன், விசாரணைக்கு ஆஜராகாததால், சைதாப்பேட்டை நீதிமன்றம் அவருக்கு, 'பிடிவாரன்ட்' பிறப்பித்துள்ளது.

தமிழக காவல் துறையில், ஈரோடு அதிரடிப்படை ஐ.ஜி.,யாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் முருகன். இவர், லஞ்ச ஒழிப்பு துறையில் பணிபுரிந்த போது, தனக்கு கீழ் பணியாற்றிய, பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி மொபைல் போனுக்கு, ஆபாச தகவல்களை அனுப்பி, பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து, சி.பி.சி.ஐ.டி., சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்தனர். முருகன் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு, முருகன் ஆஜராகாமல் இருந்துள்ளார்.

இவ்வழக்கு நேற்றுமுன்தினம் சைதாப்பேட்டை, 11வது நீதிமன்ற நீதிபதி சுல்தானா ஆரிபீன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, முருகன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய அவர் ஆஜராகவில்லை. இதனால், முருகனுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us