4 நாட்களுக்கு வெப்பம் 3 டிகிரி அதிகரிக்கும் வானிலை மையம் தகவல்
4 நாட்களுக்கு வெப்பம் 3 டிகிரி அதிகரிக்கும் வானிலை மையம் தகவல்
ADDED : பிப் 19, 2025 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு, இயல்பைவிட 3 டிகிரி செல்ஷியஸ், கூடுதலாக வெப்பம் பதிவாகும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையத்தின் அறிக்கை:
தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் இயல்பைவிட, 3 டிகிரி செல்ஷியஸ், கூடுதலாக வெப்பம் பதிவாகி உள்ளது. இது மேலும் சில நாட்கள் தொடர வாய்ப்புள்ளது.
இதன்படி, இன்று முதல் 22 வரை, தமிழகத்தில் ஒருசில இடங்களில் பகல்நேர அதிகபட்ச வெப்பநிலை, இயல்பைவிட, 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாகக் கூடும். பிற இடங்களில் வறண்ட வானிலை காணப்படும். சில இடங்களில் காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டமாகவும், காலையில் லேசான பனிமூட்டமாகவும் காணப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.