sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நிர்வாகிகளுடன் ஆலோசனை ஸ்டாலின் சொன்னது என்ன?

/

நிர்வாகிகளுடன் ஆலோசனை ஸ்டாலின் சொன்னது என்ன?

நிர்வாகிகளுடன் ஆலோசனை ஸ்டாலின் சொன்னது என்ன?

நிர்வாகிகளுடன் ஆலோசனை ஸ்டாலின் சொன்னது என்ன?


ADDED : ஆக 17, 2025 03:18 AM

Google News

ADDED : ஆக 17, 2025 03:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ஒரத்தநாடு, நெய்வேலி சட்டசபை தொகுதி தி.மு.க., நிர்வாகிகளுடன், அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின், நேற்று ஆலோசனை நடத்தினார்.

வரும், 2026 சட்டசபை தேர்தலையொட்டி, 'உடன்பிறப்பே வா' என்ற பெயரில், சட்டசபை தொகுதி வாரியாக, தி.மு.க., நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து, முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி, தி.மு.க., தலைமை அலுவலகமான, சென்னை அறிவாலயத்தில், ஒரத்தநாடு, நெய்வேலி சட்டசபை தொகுதிகளுக்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலர்களுடன் நேற்று காலை ஆலோசனை நடத்தினார்.

ஒவ்வொரு நிர்வாகியையும் தனித்தனியாக சந்தித்த ஸ்டாலின், தொகுதி நிலவரம் குறித்து கேட்டறிந்தார். தொகுதியில் தி.மு.க.,வின் செல்வாக்கு; அ.தி.மு.க.,வுக்கு எந்த அளவுக்கு பலம் உள்ளது; பூத் கமிட்டியின் செயல்பாடுகள் என, பல்வேறு தகவல்களை கேட்ட ஸ்டாலின், 'தொகுதி மக்கள், தி.மு.க., மற்றும் அரசிடம் எதிர்பார்க்கும் உதவிகள், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்த எதிர்மறை எண்ணங்கள் நீக்கி, கட்சிப் பணியையும் திறம்பட செய்ய வேண்டும்,' என்று கூறி இருக்கிறார்.






      Dinamalar
      Follow us