ADDED : மார் 10, 2026 02:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டீக்கடை நடத்தி வந்த பன்னீர்செல்வத்திற்கு, முதல்வர் பதவியை ஜெயலலிதா வழங்கினார். அ.தி.மு.க.,வில், விசுவாசமாக இருப்பேன் என்று கும்பிடு போட்டவர், இன்று, தி.மு.க.,வில் ஸ்டாலினுக்கு விசுவாசமாக இருப்பேன் என்று கும்பிடு போட்டு, 'கும்பிடு குருசாமியாக' மாறிவிட்டார்.
தேர்தலுக்கு பின், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மாற்றப்படுவார் என்று ஸ்டாலின் கூறுகிறார். தேர்தலுக்கு பின், தி.மு.க., தோற்றுப்போகும். அப்போது, ஸ்டாலினின் மருமகன் சபரீசன் கட்சியை கைப்பற்றுவார். பல மாநாடுகளை தொடர்ந்து நடத்துவதன் வாயிலாக மக்களுக்கு தி.மு.க., என்ன சொல்ல வருகிறது?
- உதயகுமார், முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,

