sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'நீட்' தேர்வு தற்கொலை எப்போது நிற்கும்?

/

'நீட்' தேர்வு தற்கொலை எப்போது நிற்கும்?

'நீட்' தேர்வு தற்கொலை எப்போது நிற்கும்?

'நீட்' தேர்வு தற்கொலை எப்போது நிற்கும்?

1


ADDED : மே 05, 2025 01:49 AM

Google News

ADDED : மே 05, 2025 01:49 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தில் 'நீட்' தேர்வை எதிர்கொள்ள பயந்து கயல்விழி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதேபோல, இரு மாதத்தில் மட்டும் ஐந்து பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வு ஒழிக்கப்படவில்லை என்றால், மாணவ - மாணவியரின் தற்கொலைகள் தொடர்வதையும் தடுக்க முடியாது.

நீட் தேர்வு தற்கொலைகளுக்கு, மத்திய - மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், 'நீட்' தேர்வை ரத்து செய்வோம் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க., நீட் தேர்வை வாபஸ் பெற வலியுறுத்தும் மசோதாவை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி, அதோடு தன் கடமையை முடித்துக் கொண்டு விட்டது.

அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க முடியாது என, மத்திய அரசு கூறிவிட்ட நிலையில், 'சட்ட போராட்டம் நடத்துவோம்' என, வசனம் மட்டும் தான் தமிழக அரசு பேசுகிறது.

நீட் தேர்விலிருந்து விலக்கு பெற நடவடிக்கை எடுக்கவில்லை. நீட் தேர்வு நடத்தப்படுவது எதற்காக என்பதே தெரியாமல், அதை நடத்திக் கொண்டிருக்கிறது, மத்திய அரசு.

மாணவ - மாணவியரின் உயிர்க்கொல்லியாக மாறியிருக்கும் நீட் தேர்வு, மாணவ குலத்திற்கு எதிரானது. உயிர்க்கொல்லி நீட் தேர்வு எப்போதுதான் ஒழியும்?

- அன்புமணி, பா.ம.க.., தலைவர்






      Dinamalar
      Follow us